search icon
என் மலர்tooltip icon

    கோவா

    • கடந்த 5ம் தேதி முதல் கோவாவின் வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
    • கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.

    பனாஜி:

    கோவாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப்படை களமிறங்கி உள்ளது.

    கோவாவின் வனப்பகுதிகளில் கடந்த 5-ம் தேதி முதல் ஆங்காங்கே காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கோவாவில் இந்திய விமானப்படையும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளது. எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகின.

    • ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார்.
    • சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பனாஜி :

    கோவா மாநில தலைநகர் பனாஜியில் 23-வது காமன்வெல்த் சட்ட மாநாடு தொடங்கியது. அதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை, முதல்-மந்திரி பிரமோத் சவந்த் மற்றும் 52 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில், கிரண் ரிஜிஜு பேசியதாவது:-

    இன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலன் அடைகிறார். நலத்திட்ட நாடு என்பதால், ஒவ்வொரு தனிமனிதரின் குரலையும் கேட்பது முக்கியம்.

    சாமானியர்களின் வாழ்க்கை எளிதாக இருக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்காகத்தான் சட்டங்கள் உள்ளன. சட்டங்களே தடைக்கற்களாக மாறும்போது, அவற்றை பின்பற்றுவது சுமையாக இருக்கும். அப்போது, அந்த சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.

    அந்தவகையில் கடந்த எட்டரை ஆண்டுகளில், 1,486 பழமையான, நடைமுறைக்கு பொருந்தாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம். 13-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியில் மேலும் 65 சட்டங்களை நீக்க மசோதாவை முன்வைப்போம். நாட்டில் உள்ள கோர்ட்டுகளில் 4 கோடியே 98 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை குறைப்பது எளிதல்ல. ஏனென்றால், முடிவுக்கு வரும் வழக்குகளை விட 2 மடங்கு புதிய வழக்குகள் வந்து விடுகின்றன.

    ஒரு நீதிபதி, சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 60 வழக்குகளை கையாள்கிறார். சில நீதிபதிகள், நாள் ஒன்றுக்கு 200 வழக்குகளை கூட முடித்து வைக்கிறார்கள். இருப்பினும், நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலைமையை சமாளிக்க தொழில்நுட்பத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இ-கோர்ட்டுகளை தொடங்கி இருக்கிறோம். எங்கள் இறுதி இலக்கு, காகிதமற்ற கோர்ட்டுகள்தான்.

    மத்தியஸ்தம் செய்வதை ஊக்குவிக்க மத்தியஸ்த மசோதாவையும் கொண்டுவர உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது.
    • சம்பவ இடத்தில் 2 சிலிண்டர்கள் அப்படியே இருந்தது.

    பானாஜி:

    கோவா தலைநகர் பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இங்கு நேற்று அதிகாலை குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது.

    இதில் பாரை ஓட்டி இருந்த ஒரு பங்களா மற்றும் 7 குடியிருப்புகள், 6 வாகனங்கள் சேதம டைந்தன. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    முதலில் அங்கிருந்த சிலிண்டர் வெடித்திருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால் சம்பவ இடத்தில் 2 சிலிண்டர்கள் அப்படியே இருந்தது. மேலும் பாரில் மின் விபத்துகளோ அல்லது ஏ.சி. வெடித்தது போன்ற அறிகுறிகள் இல்லை. எனவே அங்கு வெடித்தது என்ன? என்பது குறித்து போலீஸ் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    • கோவா மாநிலம் மோபாவில் சமீபத்தில் புதிதாக சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.
    • விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது.

    மானம் கப்பலில் போய்விட்டது என்று சொல்வதுண்டு. இப்போது பலரது மானம் விமானத்தில் போகிறது...

    விமானத்தில் பறப்பவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களும் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்வார்களா என்று சாமானிய மக்கள் ஆச்சரியப்படும் வகையில் ஆகாயத்திலும் சில்மிஷ அத்துமீறல்கள் நடைபெறுகிறது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விமானத்தில் முன் இருக்கையில் இருந்த பெண்ணின் இடுப்பை பின் இருக்கையில் இருந்து கிள்ளிய கேரள மந்திரியின் பதவியே காலியானது.

    பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி சங்கர் மிஷ்ரா நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்து அநாகரீகமாக நடந்து கொண்டது. 3 மாதங்களுக்கு பிறகு வெளிவந்து அவரை உள்ளே தள்ளியிருக்கிறது.

    மனிதர் இப்படியா இருப்பார்? பெண் பயணி அருகில் சென்று பேன்ட் ஜிப்பை கழட்டி மூத்திரம் பெய்து இருக்கிறார். ஆடையெல்லாம் நனைந்து போன அந்த பெண் விமான பணிப்பெண்கள் உதவியுடன் சுத்தப்படுத்தி மாற்று உடை அணிந்து பயணித்து இருக்கிறார்.

    பயணிகளின் இந்த மாதிரி அத்துமீறல்களை கட்டுப்படுத்துவது எப்படி என்று விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    கோவா மாநிலம் மோபாவில் சமீபத்தில் புதிதாக சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானம் புறப்பட தயாராகி கொண்டிருந்தது.

    பயணிகள் மத்தியில் தோன்றி விமான பணிப்பெண்கள் விமானத்தில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி என்று பாதுகாப்பு ஒத்திகைகளை செய்கைகள் மூலம் செய்து காட்டி கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்த 2 ரஷிய நாட்டு பயணிகள் அந்த பெண்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களது பார்வையும், சைகைகளும் எல்லை மீறிக் கொண்டிருந்ததை சக பயணிகள் சிலரும் கவனித்து கொண்டிருந்தார்கள்.

    திடீரென்று விமான பணிப்பெண்ணை பார்த்து 'வா... என் அருகே வந்து உட்கார்' என்று அழைத்தனர். ஆனாலும் பாராமுகமாக இருந்த அந்த பெண்ணை விட்டபாடில்லை. அருவெறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்த மற்ற பயணிகள் 'இவர்களோடு பறப்பது சிரமம். இறக்குவதே நல்லது' என்றனர்.

    இதையடுத்து அந்த பயணிகள் இருவரையும் பிடித்து மத்திய பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் விமான பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • வடக்கு கோவா மோபாவில் சர்வதேச விமான நிலையம் ரூ.2,870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
    • இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் ஆகியவை இங்கு புதிதாக அமைகின்றன.

    பனாஜி:

    கோவாவில் தற்போதுள்ள டபோலிம் விமான நிலையம் ஒரு வருடத்தில் 85 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.

    இந்நிலையில், வடக்கு கோவாவின் மோபாவில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    ரூ. 2 870 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், இரவில் விமானம் நிறுத்தும் வசதி, சரக்கு முனையம் ஆகியவை புதிதாக அமைகின்றன

    முதல்கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையம், முழு திட்டமும் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை கையாளும்.

    • வடக்கு கோவா மோபாவில் சர்வதேச விமான நிலையம், 2,870 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.
    • மாநிலத் தலைநகர் பனாஜியில் நடைபெறும் உலக ஆயுர்வேத காங்கிரஸின் நிறைவு விழாவிலும் பிரதமர் பங்கேற்பார்.

    கோவாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி வரும் 11ம் தேதி திறந்து வைக்கிறார்.

    அன்று கோவாவிற்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி, இதைத்தவிர பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்க இருப்பதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

    இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது:-

    வடக்கு கோவா மோபாவில் சர்வதேச விமான நிலையம், 2,870 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. முதற்கட்டமாக ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையம், முழு திட்டமும் நிறைவடைந்த பிறகு ஆண்டுக்கு ஒரு கோடி பயணிகளை ஆளும்.

    தற்போதுள்ள டபோலிம் விமான நிலையம் ஒரு வருடத்தில் 85 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ஆனால் புதிய விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்துக்கான வசதி இல்லை.

    பிரதமர் மோடி டிசம்பர் 11ம் தேதி கோவா வந்து மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை தொடங்கி வைக்கிறார்.

    மாநிலத் தலைநகர் பனாஜியில் நடைபெறும் உலக ஆயுர்வேத காங்கிரஸின் நிறைவு விழாவிலும் பிரதமர் பங்கேற்பார். வடக்கு கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காசியாபாத் (உத்தர பிரதேசம்) தேசிய யுனானி மருத்துவக் கழகம் மற்றும் புது தில்லியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளது.
    • அரசியலில் இருந்து திரும்பிய பிறகு ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    கோவாவில் நடைபெற்ற 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவு நேற்று நிறைவு பெற்றது. இதையொட்டி நடைபெற்ற விழாவில், ஆந்திர திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு 2022 ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். 


    விருதை பெற்றுக் கொண்ட நடிகர் சிரஞ்சீவி ஐ.எஃப்.எஃப்.ஐ, மத்திய அரசு மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய அவர் கூறியுள்ளதாவது: கொனிடேலா சிவசங்கர வரபிரசாத் என்று என்னைப் பெற்றெடுத்த என் பெற்றோருக்கும், சிரஞ்சீவியாக எனக்கு மறுபிறவி கொடுத்த தெலுங்குத் திரையுலகுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். சினிமா துறைக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடன்பட்டிருக்கிறேன். 


    அரசியலில் இருந்து திரும்பிய பிறகு என்னை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி. எனக்கு கிடைத்த அனுபவத்திற்கும் ஆதரவிற்கும், அரசு மற்றும் திரைத்துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்தி, தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் மட்டும் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது.
    • சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டார்.

    பனாஜி:

    53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும்.

    இதன் தொடக்க விழாவில் இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பெண்களிடம் இருந்து 40 சதவீத பணிகள் வெளிவருகின்றன என தெரிவித்தார்.

    உலகம் முழுவதிலும் இருந்து பட இயக்குனர்கள் வருகை தந்து தங்களது திரைப்படங்களை வெளியிடும் ஒரு பெரிய திரைப்பட திருவிழாவை நாம் நடத்துகிறோம் என்பது பெருமைக்கு உரிய விஷயம் என நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.

    இந்நிலையில், நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

    ஏறக்குறைய 4 தசாப்தங்களாக நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என 150 படங்களில் பணியாற்றி நடிப்புத் துறையில் நடிகர் சிரஞ்சீவி புகழ் பெற்றுள்ளார் என மத்திய மந்திரி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • சிறந்த கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
    • மூன்று தமிழ் படங்களும் இதில் இடம் பெறுகின்றன.

    மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் கோவாவில் நாளை தொடங்கி வரும் 28-ந்தேதி வரை 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய மூன்று படங்களும் இடம் பெறுகின்றன. ராஜ்மவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்.திரைப்படமும் இதில் கலந்து கொள்கிறது.


    மேலும் ரிச்சர்ட் அட்டன்பரோவின் ஆஸ்கார் விருது பெற்ற காந்தி, அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் ஆகிய படங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் ஆடியோ விளக்கங்கள் மற்றும் வசனங்களுடன் திரையிடப்படுகின்றன.

    இந்த விழாவில் பங்கேற்கும் மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களின் வளாகங்கள், சரிவுகள், கைப்பிடிகள், தொட்டுணரக் கூடிய நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், மறுசீரமைக்கப்பட்ட கழிவறைகள், பிரெய்லி வழிகாட்டு பலகைகள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும் திரைப்படக் கலை, சினிமா மற்றும் அழகியல் தொடர்பான தொழில்நுட்பத்தை பறைசாற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 21 முதல் 27 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கோவாவில் உள்ள கலா அகாடமிக்கு அருகே கால்பந்து மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் மொத்தம் 20 அரங்குகள் இடம்பெறும்.

    சமகால சினிமா தயாரிப்பில் தொழில்நுட்ப வல்லுனர்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும். இந்நிலையில் 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் கிடைக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    • 20ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை திரைப்பட விழா நடைபெறுகிறது.
    • 3 இந்திய திரைப்படங்கள் உள்பட 15 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன

    கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கான ஆயத்தப் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச திரைப்படங்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்கும், திரைப்படக் கலையின் சிறப்பை முன்வைக்கும் விதமாக கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுவதாக கூறினார்.

    இது வெற்றிகரமாகவும் அமைய இந்த நிகழ்வுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா, இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தரும் பங்கேற்பாளர்கள் மற்றும் திரைக்கலை முக்கியஸ்தர்கள் சிறப்பான வரவேற்பு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் குறைவுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த திரைப்பட விழா குறித்த இணையப்பக்கம் மற்றும் கைபேசி செயலி ஆகியவற்றை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் தொடர்புடைய அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். இம்மாதம் 20 முதல் 28-ந் தேதி வரை கோவாவில் நடைபெறும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்க மயில் விருதுக்கான பட்டியலில், குரங்கு பெடல், காஷ்மீர் ஃபைல்ஸ் உள்பட 3 இந்திய திரைப்படங்களும் 12 வெளிநாட்டு திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. 

    • தீபாவளிக்காக அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க பல்வேறு இடங்களில் ஸ்டால்களை வைத்துள்ளனர்.
    • விளக்கு, உண்ணக்கூடிய பொருட்கள் அல்லது பூக்கள் கூட எப்போதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கத் தேர்ந்தெடுங்கள்.

    கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், தீபாவளி பண்டிகைக்கு ஷாப்பிங் செய்யும்போது உள்ளூர் தயாரிப்புகளை கருத்தில் கொண்டு குடிமக்கள் "உள்ளூர்க்கான குரல்" முயற்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கோவா முதல்வர் கூறியதாவது:-

    தெற்கு கோவாவில் உள்ள லோலியம் கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பரிசளித்த தென்னை மரத்தின் இலைகளால் ஆன விளக்கை தாமே பனாஜியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்துள்ளேன்.

    மாநில அரசின் ஸ்வயம்பூர்ணா கோவா முன்முயற்சியின் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, கோவா முழுவதிலும் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் சாவந்த் உரையாற்றினார்.

    அது விளக்கு, உண்ணக்கூடிய பொருட்கள் அல்லது பூக்கள் கூட எப்போதும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்கத் தேர்ந்தெடுங்கள். இதன் மூலம், உள்ளூர் முன்முயற்சிக்கான குரலை ஊக்குவிக்க உதவ வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளிக்கும் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் தீபாவளிக்காக அவர்கள் தயாரித்த பொருட்களை விற்க பல்வேறு இடங்களில் ஸ்டால்களை வைத்துள்ளனர்.

    இந்த பொருட்களை வாங்குங்கள். அவை கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அவைகளை வாங்கி ஊக்குவியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவா பாஜகவில், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்தனர்.
    • காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது.

    பனாஜி:

    கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக முதலமைச்சர் பிரமோத் சாவந்த் முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் தலைமையில்  8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

    இதையடுத்து அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலம் 11ல் இருந்து 3 ஆக குறைந்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைந்ததால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 


    இந்நிலையில், பாஜகவில் இணைந்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோவா மாநில முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் கூறியுள்ளதாவது: காங்கிரசில் தலைமை எங்கே இருக்கிறது? தலைமை இருந்திருந்தால், 2017 ஆண்டு 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்த போது நாங்கள் ஆட்சி அமைத்திருப்போம்.

    திடீரென என்னிடம் கலந்தாலோசிக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்கி விட்டார்கள்.இது நியாயமா? என்னை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டியது கட்சித் தலைமையின் பொறுப்பாகும்.

    ஒரு முடிவெடுக்கணும்னு நினைச்சப்போ, நான் கோவிலுக்குப் போனேன், என் தொண்டர்கள் கோபமா இருக்காங்க, இனி காங்கிரசுக்கு வேலை செய்ய வேண்டாம்னு எனக்கு சாதகமாக கோவில் பிரசாதம் வந்திருக்கு. நான் அவர்களிடம் (ஆதரவு எம்எல்ஏக்கள்) உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படுங்கள், நான் உங்களுக்கு ஆதரவளிக்கிறேன் என்று தெரிவித்தேன். இப்போது காங்கிரஸ் கட்சியில் எதுவும் மிச்சமில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே, ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல், கோவாவில் ஆபரேஷன் கிச்சாட் மூலம் எம்எல்ஏக்களை பாஜக மாற்றியுள்ளாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    ×