ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படை கப்பலில் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி இரவு உணவு அருந்தினார். இன்று காலை, ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் ஒரு யோகா அமர்வில் அவர் கலந்து கொண்டார்,
ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படை கப்பலில் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி
Published on

நாடு முழுவதும் தீபாவளி கொண்ட்டாட்டம் களைகட்டியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி கோவா கடற்கரையில் உள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கடற்படை கப்பலில் தீபாவளியை கொண்டாடினார்.

ஐஎன்எஸ் விக்ராந்தில் இருந்தபோது, பிரதமர் மோடி மிக் 29 கே போர் விமானங்களால் சூழப்பட்ட விமான தளத்திற்குச் சென்றார்.

பிரதமர் மோடி முன்பு ஐஎன்எஸ் விக்ராந்தின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பல்வேறு தேசபக்தி பாடல்களைப் பாடினார்கள். இதில் ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப்படைகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் அவர்களால் எழுதப்பட்ட பாடல் அடங்கும்.

கடற்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி இரவு உணவு அருந்தினார். இன்று காலை, ஐஎன்எஸ் விக்ராந்தின் தளத்தில் ஒரு யோகா அமர்வில் அவர் கலந்து கொண்டார்,

ஐஎன்எஸ் விக்ராந்தில் உள்ள கடற்படை வீரர்களுக்கு பிரதமர் மோடி ஒரு ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். இதனையடுத்து அவர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com