என் மலர்
டெல்லி
- தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
- செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்.
குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை மாணவர்களின் எதிர்காலத்தை வெறும் வருமானம் ஈட்டுவதற்கான வழியாக மாற்றியுள்ளது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், நீட் தேர்வு ஊழலின் மையமாகத் தேசியத் தேர்வு முகமை உள்ளது. அது, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அங்கம். ஆனால், தனது பணிகளை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைத்துச் செயல்படுகிறது. தேசிய தேர்வு முகமையானது தற்போது, மெகா மோசடிகள் நடைபெற்ற மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தலைமை தாங்கிய ஒருவரின் தலைமையில் உள்ளது.

மாணவர்களிடமிருந்து ரூ.3,512.98 கோடி வசூலித்துள்ள NTA, தேர்வுகளை நடத்துவதற்காக ரூ.3,064.77 கோடி செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
ஆனால் இந்த லாபத்தைத் தேசிய தேர்வு முகமை, தானாகவே தேர்வு நடத்தும் அளவுக்கு அதன் திறமையை மேம்படுத்தப் பயன்படுத்தவில்லை. எனவே, மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மோடி அரசு சீரழித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
- கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு இந்த ஆண்டு மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ம.பி.யின் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோவிலின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ம.பி.யில் நடந்த விபத்து எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் எனபதிவிட்டுள்ளார்.
- வக்பு வாரியத்துக்குச் சொந்தமாக மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் கொண்ட 8.7 லட்சம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது
இஸ்லாமியர்களின் சமூகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்காக இயங்கி வரும் வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகச் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட உள்ளது.
சமீபத்தில் தலைநகர் டெல்லியில் உள்ள 123 சொத்துகளுக்கு வக்பு வாரியம் உரிமை கோரியிருந்த விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே மத்திய அரசு தற்போது இந்த அதிகார குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளல் உள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் தற்போது வக்பு வாரியத்துக்குச் சொந்தமாக மொத்தம் 9.4 லட்சம் ஏக்கர் கொண்ட 8.7 லட்சம் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சொத்துக்கள் மீது வக்பு வாரியம் உரிமை கோருவது தற்போது எளிதான ஒன்றாக உள்ளது. எனவே அதைக் கட்டுப்படுத்தும் வகையில் தன்னிச்சையாக எந்த ஒரு சொத்துக்கும் வக்பு வாரியம் உரிமை கோர முடியாதபடி புதிய நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதவிர்த்து வக்பு வாரியத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் உட்பட வக்பு வாரிய அதிகார வரையறையில் 40 திருத்தங்களைக் கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் தற்போது கிடைத்துள்ளது என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்க உள்ள நிலையில் இந்த புதிய மசோதா எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதற்கிடையில் இந்த மசோதா மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
- உலக தலைவர்களில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் நீடிக்கிறார்.
- மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 2-வது இடத்தில் உள்ளார்.
புதுடெல்லி:
உலக அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக்கணிப்பை மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில், மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை சமீபத்தில் நடத்தியது.
இதில், பிரபலமான உலக தலைவர்களில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்திய பிரதமர் மோடிக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருந்தனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 63 சதவீதம் பேர் ஆதரவளித்ததால் 2-ம் இடம் பிடித்தார்.
அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 60 சதவீதம் பேர் 3-ம் இடத்திலும், சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 52 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும் உள்ளார்.
அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் 47 சதவீதத்துடன் 5வது இடத்திலும், பிரிட்டன் பிரதமர் கெய்ரி ஸ்ட்ராமர் 45 சதவீதத்துடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 45 சதவீதத்துடன் 7-ம் இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி 42 சதவீதத்துடன் 8-ம் இடத்திலும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 40 சதவீதத்துடன் 9-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 40 சதவீதத்துடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.
கடந்த ஆண்டும் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.
- துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்குவதற்கு வசதியாக பாரிஸில் ஒலிம்பிக் கிராமம் கொடுக்கப்பட்டுள்ளது.
சில விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு ஓட்டல்களை தேடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில விளையாட்டு வீரர்கள் வெப்ப அலைக்கு ஏற்ப தங்களது சொந்த உபகரணங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு 40 ஏ.சி.களை வழங்கியுள்ளது.
இதனால் இந்திய வீரர்கள் வசதியாக தங்குவதற்கும், ஓய்வு நேரத்தை அனுபவிக்கவும் முடியும். ஏ.சி.களுக்கான செலவை விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
- ஒலிம்பிக்கில் இந்திய அணி இதுவரை 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
- ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் இந்தியர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்றார்.
புதுடெல்லி:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி இதுவரை 3 வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே ஆகியோர் தனிநபர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் வெண்கலம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவின் பிரபல ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது சிறந்த வீரர்கள் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிக்காக சிறப்பானதை பெறுவதற்கு தகுதியானவர்கள் என பதிவிட்டுள்ளார்.
சஜ்ஜன் ஜிண்டாலின் இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டாலின் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து மோரிஸ் காரேஜஸ் இண்டியா என்ற நிறுவனம், எம்ஜிவிண்ட்சர் என்ற சொகுசு காரை தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
- பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் உலகில் இந்தியா நம்பர் ஒன் நாடாக உள்ளது.
- உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், காட்டன், சர்க்கரை, டீ உற்பத்தியில் மிகப்பெரிய 2-வது நாடாக உள்ளது.
இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தியா உணவு உபரி நாடாகிவிட்டது எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
இந்தியாவின் பொருளாதார கொள்கைகளின் மையமாக விவசாயம் உள்ளது. யூனியன் பட்ஜெட் 2024-25 நிலையான மற்றும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கக் கூடிய விவசாயத்திற்கு ஒரு பெரிய உந்துதலை அளித்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது.
தற்போது இந்தியா உணவு தன்னிறைவு பெற்ற நாடாகிவிட்டது. பால், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் உற்பத்தியில் உலகில் இந்தியா நம்பர் ஒன் நாடாக உள்ளது. உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், காட்டன், சர்க்கரை, டீ உற்பத்தியில் மிகப்பெரிய 2-வது நாடாக உள்ளது.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலக நாடுகளுக்கு கவலையளிக்கும் ஒரு காலம் இருந்தது. தற்போது இந்தியா உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டசத்து பாதுகாப்பில் உலகளாவிய தீர்வு வழங்க பணியாற்றி கொண்டிருக்கிறது.
இந்திய விவசாயத்தில் 90 சதவீத விவசாயிகள் மிகவும் சிறிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரர்கள். இந்த சிறிய விவசாயிகள் இந்தியாவின் உணவு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பலம்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
- பட்ஜெட்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது.
- அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விரைவில் 5 ஜி மற்றும் விரிவுபடுத்தப்பட் 4 ஜி சேவைகளை சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது 5 ஜி திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா[Jyotiraditya Scindia] பி.எஸ்.என்.எல் 5 ஜியை பயன்படுத்தி வீடியோ கால் சேவையை முதல் முறையாக பரிசோதித்து பார்த்தார். டெல்லியில் உள்ள c-dot கேம்பஸில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
அந்த வீடியோ காலில் பெண் ஒருவருடன் 5 ஜி சேவையின் செயல்திறன் குறித்து பேசினார். இதன்மூலம் பி.எஸ்.என்.எல் 5 ஜி தொழில்நுட்பத்தின் செயல் திறன் உறுதியாகியுள்ளது என்று ஜோதிராதித்ய சிந்தியாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பகிரப்பட்ட அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இந்த வருடத்திற்கான பட்ஜெட்டில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க ரூ.82,000 கோடி ஒதுக்கப்பட்டது. தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களை அதிகரித்து வரும் நிலையில் அனைவரின் பார்வையும் பி.எஸ்.என்.எல் பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அறிக்கைப்படி, இந்தியாவின் பட்டினிக் குறியீடானது மிகவும் பின்தங்கிய நிலையில் 111வது இடத்தில் தீவிரமான அளவில் உள்ளது.
- ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மட்டுமே பட்டினியோடு நேரடியாகத் தொடர்புடையது என்று அன்னபூரணா தேவி விளக்கமளித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீடு Global Hunger Index (GHI) அறிக்கை கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த குறியீட்டில் மொத்தம் உள்ள 121 நாடுகளில் 111 வது இடத்தில் இந்தியா உள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
அதன் அறிக்கைப்படி, இந்தியாவின் பட்டினிக் குறியீடானது மிகவும் பின்தங்கிய நிலையில் 111வது இடத்தில் தீவிரமான அளவில் உள்ளது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில் இதுகுறித்து தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குத் தனது பதிலை மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளார்.

அதில் அவர், GHI -யின் அறிக்கை இந்தியாவின் உண்மை நிலையை விவரிக்கவில்லை. GHI பயன்படுத்தும் பட்டினியை அளக்கும் காரணிகள் குறைபாடுடையதாகும். எனவே அந்த அறிக்கை face value கொண்டதல்ல. மேலும் இந்தியாவின் பட்டினி அளவைப் பொறுத்தவரை GHI உடைய மதிப்பீடு தவறானது.

GHI பட்டினிக் குறியீட்டை ஊட்டச்சத்துக் குறைபாடு, 5வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது. இவற்றில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மட்டுமே பட்டினியோடு நேரடியாகத் தொடர்புடையது என்று அன்னபூரணா தேவி விளக்கமளித்துள்ளார்.
- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
- போலீசார் தனித்துவிடப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.
இதனை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கெடுக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை கேட்டு தூத்துக்குடி நில எடுப்பு தாசில்தார் சந்திரன், சிப்காட் டாஸ்மாக் டெப்போ மேலாளர் கண்ணன், தூத்துக்குடி மண்டல துணை தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது போலீஸ் அதிகாரிகள் சார்பில் வக்கீல் பி.பாலாஜியுடன் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, 'ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் இந்த விவகாரம் பந்தாடப்படுகிறது. இதை அனுமதிக்க முடியாது.
போலீசார் தனித்துவிடப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும் தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது' என வாதிட்டார்.
வாதங்களை பதிவுகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, 'துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை கணக்கிடுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும் மேல்முறையீட்டு மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் எதிர்மனுதாரர்களான மனித உரிமை ஆர்வலர் என்ட்ரி டிபேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அர்ஜூனன் உள்ளிடடோருக்கு உத்தரவிட்டது.
- 936 கி.மீட்டர் நீளத்திற்கு அதிவேக சாலை அமைய இருக்கிறது.
- தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் முதலீடு உட்பட மொத்த மூலதன முதலீடு 6 மடங்கு அதிகரித்துள்ளது.
50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 அதிவேக சாலை வழித்தட திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தளவாடத் திறனை மேம்படுத்துதல், நெரிசலைக் குறைத்தல் மற்றும் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துதல் நோக்கத்தில் இந்த வழித்தட திட்டம் அமையும் எனக் குறிப்பிட்டள்ளார்.
மொத்தம் 936 கி.மீட்டர் நீளம் கொண்டதாக இந்த திட்டம் அமைய இருக்கிறது. ஆக்ரா-குவாலியர் இடையே அதிவேக வழித்தடம் (6 வழிச்சாலை) கராக்பூர்- மோரேக்கிராம் தேசிய அதிவேக வழித்தடம் (நான்கு வழிச்சாலை), தராத்- தீசா- மெசானா- அகமதாபாத் தேசிய அதிவேக வழித்தடம் (6 வழிச்சாலை), அயோத்தி ரிங் ரோடு (நான்கு வழிச்சாலை), ராய்ப்பூர்- ராஞ்சி தேசிய அதிவேக வழித்தடத்தில் பாதல்கயோன்- கும்லா இடையில் ஐந்து வழிச்சாலை, கான்பூர் ரிங் ரோடு (6 வழிச்சாலை) வடக்கு கவுகாத்தி பைபாஸ் (நான்கு வழிச்சாலை), புனே அருகே நாஷிக் பாட்டா- கெத் காரிடார் (8 வழிச்சாலை) ஆகிய வழித்தடம் அமைய இருக்கிறது.
140 கோடி மக்கள் பிரதமர் மோடிக்கு வரலாற்று சிறப்புமிக்க ஆணையை கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. 60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து மூன்று முறை அரசு அதிகாரத்திற்கு வந்துள்ளது. அரசு அமைந்ததைத் தொடர்ந்து, வாதவன் துறைமுகத்துக்கு ₹76,000 கோடி முதலீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு ஒரு நாட்டின் பொருளாதார செழுமைக்கான அடித்தளம் மற்றும் அதன் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.5- 3.0 மடங்கு விளைவைக் கொண்டிருக்கிறது என அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் முதலீடு உட்பட மொத்த மூலதன முதலீடு 6 மடங்கு அதிகரித்துள்ளது. 2013-14- ல் சுமார் 50,000 கோடி ரூபாய இருந்த நிலையில், 2023-24-ல் 3.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
- 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை கொடுத்தோம்- அமித் ஷா
- மாநிலங்களவையில் அமித் ஷா சொன்னது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது- ஜெய்ராம் ரமேஷ்
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவு கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. தற்போது வரை பலி எண்ணிக்கை 340-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசும்போது, கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு எச்சரிக்கையை செயல்படுத்தவில்லைத் தெரிவித்திருந்தார்.
இதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் மறுத்திருந்தார். 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.
அந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் வழங்கிய நோட்டீஸில் "மத்திய அரசின் முன்னெச்சரிக்கை குறித்த மத்திய உள்துறை மந்திரியின் அறிக்கைகள் பொய் என நிரூபிக்கப்பட்டதன் மூலம் ராஜ்யசபாவை தவறாக வழி நடத்தியது தெளிவாகிறது. ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் சபையை தவறாக வழி நடத்துவது சிறப்புரிமையை மீறுவதாகவும், அவையை அவமதிப்பதாகவும் அமைகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அமித் ஷா மாநிலங்களவையில் "நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக ஜூலை 23-ந்தேதி மத்திய அரசு முன்னெச்சரிக்கை கொடுத்தது. ஜூலை 24 மற்றும் 25-ந்தேதி மீண்டும் எச்சரித்தோம். ஜூலை 26-ந்தேதி 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது" என அமித் ஷா தெரிவித்தார்.






