என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.
    • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி தொடர் நாயகன் விருது வென்றார்.

    டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.

    2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் தொடர் நாயகன் விருது வென்று தன மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    3 ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்த நிலையில், அந்த ஊரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் விராட் கோலி சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி வைரலாக பரவி வருகிறது. 

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 39.5 ஓவரில் 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார்.

    விராட் கோலி ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 40 பந்தில் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்கள் எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சதமடித்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார்.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார். இதில் ஒரு சிக்சரும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இது அவரது முதல் சதமாகும்.

    • ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் கடந்துள்ளார்.
    • இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.

    விசாகப்பட்டினம்:

    விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ரோகித் சர்மா தான் விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் குவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.

    அந்த பட்டியல்:

    சச்சின் டெண்டுல்கர்-34,357 ரன்கள்

    விராட் கோலி-27,910 ரன்கள்

    ராகுல் டிராவிட்-24,208 ரன்கள்

    ரோகித் சர்மா-20000 ரன்கள்

    • டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
    • 6 பேரும் பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் படிபூஜையில் பங்கேற்க சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சிலகலூரி பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கனப்பவரம் என்னும் இடத்தில் புதிய டிராக்டர்களை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் விட்டம்ராஜூ பள்ளி அருகே நடைபெறும் படிபூஜையில் கலந்து கொள்வதற்காக கார் ஒன்று வேகமாக சென்றது. காரில் 6 பேர் இருந்தனர்.

    டிரெய்லர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரிலிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் செல்லும் வழியிலேயே இறந்தார். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியான 5 பேரும் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த வாசு, மகேஷ், ஸ்ரீகாந்த், ராமிரெட்டி, யஷ்வந்த் சாயி என்பதும், என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தனர். 6 பேரும் பல்நாடு மாவட்டத்தில் நடைபெறும் படிபூஜையில் பங்கேற்க சென்றபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
    • பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.05 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த மாவட்டத்தில் உள்ள தர்சி, முத்துரமூரு, தாளூரு, கங்காவரம், ராமபத்திராபுரம், மாண்டமூரூ, சங்காராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது. சுமார் 3 வினாடிகள் மட்டுமே நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியது. வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    பிரகாசம் மாவட்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    வரும் நாட்களில் இது மீண்டும் நிகழக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லக்கூடிய வகையில், ஏதேனும் சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து அதிகாரிகள் எங்களுக்குத் தெரியப்படுத்தினால் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்," என்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் தெரிவித்தனர்.

    • ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன்.
    • ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அமராவதி வெங்கடபாலத்தில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 2-வது பிரகாரம், 7 மாடி மகாராஜா கோபுரம், 3 கோபுரங்கள் ஆர்ஜித சேவை மண்டபம், வாகன ரத மண்டபம், பஞ்சமுக ஆஞ்சநேய சாமி சிலை மற்றும் புஷ்கரணி ரூ.260 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஏழுமலையான் முன்னிலையில் மக்கள் தூய்மையாகவும், சுத்தமாகவும், தூய எண்ணங்களுடன் இருக்க வேண்டும். கோவில் விரிவாக்க பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும் நான் சிறு வயதிலிருந்து ஏழுமலையானை வணங்கி வருகிறேன்.

    ஏழுமலையானை தரிசிக்க செல்லும்போது முதல் மந்திரியாக இல்லாமல் நான் வரிசையில் இறைவனிடம் செல்கிறேன். அங்கு சாதாரண மனிதனாக இருப்பதுதான் என்னுடைய உணர்வு. தவறு செய்தவர்கள் அடுத்த பிறவில்தான் தண்டிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.

    தவறு செய்தவர்களுக்கு இந்த பிறவிலேயே அவர்களை ஏழுமலையான் தண்டிப்பார். சாமியை தரிசிக்க செல்லும் அனைவரும் இதை நினைவில் கொள்ள வேண்டும். ஏழுமலையானை யாரும் அவதூறு செய்ய விடமாட்டேன். கடந்த 2003-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இருந்து எனது உயிரை காப்பாற்றியவர் ஏழுமலையான்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் ஏழுமலையான் கோவிலை கட்ட பக்தர்கள் முன் வர வேண்டும். மும்பையில் ரூ.100 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோவிலை கட்ட ரேமன்ட் நிறுவனம் முன் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இபிஎஸ் கல்லூரியில் ஒரு மாதத்திற்குள் 2 மாணவிகள் உயிர்மாய்ப்பு.
    • மாணவி மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தகவல்

    ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் நேற்று காலை தான் தங்கியிருந்த விடுதி கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 19 வயது மாணவி பல்லவி, குப்பத்தில் உள்ள பிஇஎஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (பிஎஸ்சி நர்சிங்) படித்து வந்தார்.

    போலீசாரின் கூற்றுப்படி பல்லவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வியாழனன்று மாலை (20.11.25) விடுதியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மாணவி குதித்ததை பார்த்த சக மாணவிகளும், அங்கிருந்த ஊழியர்களும் அவரைமீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமை காலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல்லவியின் குடும்பத்தினர் கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தை குற்றம் சாட்டியுள்ளனர். 

    முன்னதாக அக்.31ஆம் தேதி முதலாமாண்டு மாணவி ஒருவர் தூக்க மாத்திரை உட்கொண்டு இறந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் இரண்டு மாணவிகள் உயிரை மாய்த்துக்கொண்டது அங்குள்ள சக மாணவிகள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத தொடக்கத்தில் சித்தூர் மாவட்டத்தில் பொறியியல் மாணவர்கள் இருவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

    மற்றொரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வாரம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு பொறியியல் மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டார். மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது பெற்றோர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

    • சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்
    • பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் இன்று நடைபெற்ற சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார். அதன்பின்னர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், "ஒரே ஒரு இனம் தான், அது மானுட இனம். ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி தான், அது உள்ளத்தின் மொழி. கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்தவர்" என்று தெரிவித்தார்.

    ஐஸ்வர்யா ராயின் இந்த பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    • தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
    • ரூ.1 லட்சம் கடன் வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார்.

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கரிவிடி மண்டலம், கோனூரில் நேற்று ஒரு வீட்டில் பூஜை செய்தனர். பின்னர் மொட்டை மாடியில் விளக்கேற்றி வைத்தனர். அந்த விளக்கின் மேல் பகுதியில் தூக்கி செல்லும் வகையில் கம்பி இருந்தது.

    அங்கு வந்த ஒரு காகம் விளக்கை தனது கால்களால் அலேக்காக தூக்கி சென்றது. அதை ஒரு குடிசை வீட்டின் மீது போட்டது. இதனால் வீடு தீப்பிடித்தது. அருகே இருந்த மேலும் 3 குடிசை வீடுகளும் எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.

    குத்தகை விவசாயியான கோபி என்பவரது வீடு முழுமையாக எரிந்தது. அவர் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தனது வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்துடன் தங்க நகைகளும் எரிந்தன.

    தாசில்தார் சி.எச் பங்கர்ராஜு சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சொத்து இழப்பு சுமார் ரூ.4 லட்சம் என்று மதிப்பிட்டனர். அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

    • பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • நிதிஷ் குமார் கட்சி கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு இடங்களை பிடிக்க இருக்கிறது.

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர இருக்கிறார்.

    இந்த நிலையில் பீகார் தேர்தலில் என்டிஏ-யின் அமோக வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று பெற்றி, முற்போக்கு நிர்வாகத்தை தொடர்ந்து பீகார அரசால் கொடுக்க முடியும். மற்றும் பிரதமர் மோடியின் விக்ஷித் பாரத்தின் மீதான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

    நிதிஷ் குமார் மற்றும் வெற்றி பெற்ற பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கு வாழ்த்துகள்.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    துணை முதல்வர் பவன் கல்யாண் "பீகார் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர்.
    • சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து கடந்த 2022 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

    திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் கடந்த 1½ வருடங்களாக கணவரை பிரிந்து சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். சரஸ்வதி வழக்கம்போல் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று பின்னர் வேலை முடிந்து மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு திரும்புவது வழக்கம்.

    மனைவி வேலைக்கு சென்று வீடு திரும்புவதை கடந்த சில நாட்களாக விஜய் கண்காணித்து வந்தார். நேற்று காலை 8 மணிக்கு ஆஸ்பத்திரிக்கு வேலைக்குச் சென்ற சரஸ்வதி வேலை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார். ஆஸ்பத்திரிக்கு வெளியே விஜய் கத்தியுடன் மறைந்து இருந்தார்.

    சரஸ்வதி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வருவதை கண்ட விஜய் ஆவேசத்துடன் சென்று மனைவியை சரமரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சரஸ்வதியின் கழுத்தில் வெட்டினார். சரஸ்வதி தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார்.

    அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் திரண்டு வந்து அவரை மீட்க முயன்றனர். அப்போது விஜய் மனைவியின் கழுத்தை அறுத்தார். சரஸ்வதியின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. தடுக்க முயன்ற பொதுமக்களை ரத்தம் சொட்டசொட்ட இருந்த கத்தியை காட்டி உங்களையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

    இதனால் உயிர் பயத்தில் பொதுமக்கள் யாரும் விஜய்யை நெருங்கவில்லை. சிறிது நேரத்தில் சரஸ்வதி உயிருக்கு போராடியபடி துடித்து பரிதாபமாக இறந்தார். சாகும் வரை விஜய் அங்கேயே நின்றார்.

    அங்கிருந்த பொதுமக்கள் இதுகுறித்து சூர்ய ராவ் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் விஜயை மடக்கி பிடித்தனர். சரஸ்வதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் விஜயவாடாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×