என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
![தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல... தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல...](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202021359027068_Tamil_News_Talking-to-yourself-is-not-mental-illness_SECVPF.gif)
X
தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல...
தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல...
By
மாலை மலர்2 Feb 2022 8:29 AM GMT (Updated: 2 Feb 2022 8:29 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
நம்மை சுற்றியுள்ள பலர் சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்வதை பார்த்திருப்போம். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் இப்படி பேசிக்கொள்வது உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன.
நம்மை சுற்றியுள்ள பலர் சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்வதை பார்த்திருப்போம். சில சமயங்களில் நாமே இவ்வாறு செய்திருக்கலாம். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும் இப்படிபேசிக்கொள்வது உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. தனக்குத்தானே பேசிக்கொள்ளும் வழக்கம் பற்றிய தகவல்கள் சில
சுய பேச்சு
சுயபேச்சு என்பது உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதாகும். இது ஆழ் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எண்ணங்கள் நம்பிக்கைகள், கேள்விகள் மற்றும் யோசனைகளை வெளிப்படுத்துகிறது.
சுய பேச்சு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கலாம். இதன் பெரும் பகுதி உங்கள் ஆளுமையைப்பொறுத்தது. நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவராக இருந்தால் உங்கள் பேச்சு மிகவும் நபிக்கையூட்டுவதாக அமையலாம். அவநம்பிக்கையாளராக இருந்தால் எதிரிமறையானதாக இருக்கலாம்.
எதிர்மறையான சுயபேச்சை முயற்சியின் மூலம் நேர்மறையானதாக மாற்றி கொள்ள முடியும். இது மன உளைச்சலைச் தடுக்கும். நேர்வழி காட்டும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஒரு வேலையை செய்வதற்காக உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்வது உங்கள் லட்சியத்தை அடைவதற்காக யோசனைகளை கூறித்கொள்வது, செய்த தவறுகளுக்காக உங்களை நீங்களே திட்டிக்கொள்வது. இனி அத்தகைய தவறுகள் செய்யக்கூடாது என்று தட்டிக்கொடுத்து கொள்வது, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை குறித்து நினைவுபடுத்தி கொள்வது போன்றவை நேர்மறையான சுயபேச்சு ஆகும்.
நன்மைகள்
சுயபேச்சு, செயல்திறன் மற்றும் பொது வாழ்வை மேம்படுத்தும். எடுத்துக்காட்டாக விளையாட்டு வீரர்கள் சுய பேச்சு அவர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும் என்பதை சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
சுய பேச்சால் உயிர்ச்சத்து பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வலி குறையும். இதய ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும்.
தனக்குள் பேசும் நேர்மறையான சுய பேச்சு உள்ளவர்கள் மனநல திறன்களை கொண்டிருப்பார்கள். சவால்களை தீர்க்கவும், வித்தியாசமாக சிந்திக்கவும், கஷ்டங்கள், சவால்கள் திறமையாக சமாளிக்கவும் உதவுவதாக வல்லுநல்கள் கூறுகிறார்கள். சுய பேச்சு மன அழுத்தம், பதற்றத்தின் தீங்கு தரும் விளைவுகளை குறைக்கும் சக்தி வாய்ந்தது.
சுயபேச்சு எண்ண ஓட்டங்களை சீராக்குகிறது. மனதை கட்டுப்படுத்துகிறது. இலங்குகளை அடைய உதவுகிறது. செய்யும் வேலையை சிறப்பாக செய்ய ஊக்குவிக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்ற வைக்கிறது.
உன்னால் முடியும், முயற்றி செய், வெற்றி நிச்சயம் போன்ற வாக்கியங்களை உங்களுக்கு நீங்களே சொல்லிகொள்ளும் நேர்மறையான சுயபேச்சு, வாழ்வில் சிறந்த இடத்தை அடைவதற்கு உதவுகிறது.
சுய பேச்சு
சுயபேச்சு என்பது உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதாகும். இது ஆழ் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எண்ணங்கள் நம்பிக்கைகள், கேள்விகள் மற்றும் யோசனைகளை வெளிப்படுத்துகிறது.
சுய பேச்சு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கலாம். இதன் பெரும் பகுதி உங்கள் ஆளுமையைப்பொறுத்தது. நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவராக இருந்தால் உங்கள் பேச்சு மிகவும் நபிக்கையூட்டுவதாக அமையலாம். அவநம்பிக்கையாளராக இருந்தால் எதிரிமறையானதாக இருக்கலாம்.
எதிர்மறையான சுயபேச்சை முயற்சியின் மூலம் நேர்மறையானதாக மாற்றி கொள்ள முடியும். இது மன உளைச்சலைச் தடுக்கும். நேர்வழி காட்டும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஒரு வேலையை செய்வதற்காக உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்வது உங்கள் லட்சியத்தை அடைவதற்காக யோசனைகளை கூறித்கொள்வது, செய்த தவறுகளுக்காக உங்களை நீங்களே திட்டிக்கொள்வது. இனி அத்தகைய தவறுகள் செய்யக்கூடாது என்று தட்டிக்கொடுத்து கொள்வது, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை குறித்து நினைவுபடுத்தி கொள்வது போன்றவை நேர்மறையான சுயபேச்சு ஆகும்.
நன்மைகள்
சுயபேச்சு, செயல்திறன் மற்றும் பொது வாழ்வை மேம்படுத்தும். எடுத்துக்காட்டாக விளையாட்டு வீரர்கள் சுய பேச்சு அவர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும் என்பதை சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
சுய பேச்சால் உயிர்ச்சத்து பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வலி குறையும். இதய ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும்.
தனக்குள் பேசும் நேர்மறையான சுய பேச்சு உள்ளவர்கள் மனநல திறன்களை கொண்டிருப்பார்கள். சவால்களை தீர்க்கவும், வித்தியாசமாக சிந்திக்கவும், கஷ்டங்கள், சவால்கள் திறமையாக சமாளிக்கவும் உதவுவதாக வல்லுநல்கள் கூறுகிறார்கள். சுய பேச்சு மன அழுத்தம், பதற்றத்தின் தீங்கு தரும் விளைவுகளை குறைக்கும் சக்தி வாய்ந்தது.
சுயபேச்சு எண்ண ஓட்டங்களை சீராக்குகிறது. மனதை கட்டுப்படுத்துகிறது. இலங்குகளை அடைய உதவுகிறது. செய்யும் வேலையை சிறப்பாக செய்ய ஊக்குவிக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்ற வைக்கிறது.
உன்னால் முடியும், முயற்றி செய், வெற்றி நிச்சயம் போன்ற வாக்கியங்களை உங்களுக்கு நீங்களே சொல்லிகொள்ளும் நேர்மறையான சுயபேச்சு, வாழ்வில் சிறந்த இடத்தை அடைவதற்கு உதவுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)