என் மலர்
நீங்கள் தேடியது "மன அழுத்தம்"
- 2023-ம் ஆண்டில் டெல்லியில் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகள் 22,385 ஆக இருந்தன.
- பரம்பரை காரணிகள் இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.
புதுடெல்லி:
டெல்லியில் மாரடைப்பு மற்றும் பிற இதயம் தொடர்பான நோய்களால் ஏற்படும் இறப்புகள் அதிகரித்து வருகின்றன. 2024-ம் ஆண்டில் இதுபோன்ற இறப்புகளில் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
2023-ம் ஆண்டில் டெல்லியில் இதய நோய்களால் ஏற்படும் இறப்புகள் 22,385 ஆக இருந்தன. இது 2024-ல் 1,84,539 ஆக அதிகரித்தது. டெல்லி அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கையின்படி டெல்லியில் கடந்த சில ஆண்டுகளில் 3,20,957 பேர் மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களால் இறந்துள்ளனர்.
இவற்றில் 108,872 பேர் 45-64 வயதுக்குட்பட்டவர்கள், 82,048 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். 25-44 வயதுக்குட்பட்டவர்களில் 46,129 பேர் இறந்துள்ளனர். 14,321 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
பரம்பரை காரணிகள் இதய நோய்களை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் நவீன வாழ்க்கை முறை காரணமாக ஆபத்து அதிகரித்து வருகிறது.
புகைபிடித்தல், தொலைக்காட்சிப் பழக்கம், உடல் செயல்பாடு இல்லாமை, அதிக மன அழுத்தம், தூக்கமின்மை, காற்று மாசுபாடு இந்த காரணிகள் அனைத்தும் டெல்லியில் மாரடைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன என்று ஸ்ரீ பாலாஜி அதிரடி மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அமர் சிங்கால் தெரிவித்துள்ளார்.
- மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
- அதே போல் ஆண்களும் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக இந்திய மனநல மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய காலத்தில் அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடியது மன அழுத்தம். கல்வி, வேலை, வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் காரணமாக பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அதே போல் ஆண்களும் ரத்த அழுத்தம், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களும் பெருமளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அதற்கு செல்போனும் முக்கிய காரணமாக இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.
இந்தநிலையில் இந்திய மனநல மருத்துவ சங்கத்தின் 77-வது ஆண்டு தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கி நடந்து வருகிறது. நாளை (சனிக்கிழமை) வரை இந்த மாநாடு நடக்கிறது.
இதில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மனநல டாக்டர்கள், மருத்துவ வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதில் பல அதிர்ச்சியூட்டும், கவலைக்குரிய விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. அவை வருமாறு:-
மன நல பிரச்சினைகள் வாழ்வின் பிற்பகுதியில் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இளம்பருவத்திலோ அல்லது இளமைப்பருவத்திலோ முன்கூட்டியே வெளிப்படுகின்றன.
மனச்சோர்வு, போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் மற்றும் நடத்தை சார்ந்த பழக்கங்களும் தற்போது குறைந்த வயதிலேயே பதிவாகின்றன.
34.6 சதவீத மன அழுத்த பிரச்சினைகள் 14 வயதுக்கு முன்பும், 48.4 சதவீதம் 18 வயதுக்கு முன்பும், 62.5 சதவீதம் 25 வயதுக்குள்ளும் தொடங்குகின்றன.
இது கல்வி முடிவுகள், தொழில் பாதைகள், உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2011-ம் ஆண்டில் இருந்து 2021-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு மன உளைச்சல் 101.7 சதவீதம் அதிகரித்துள்ளன.
60 சதவீத மன அழுத்த பிரச்சினைகள் 35 வயதுக்குட்பட்டவர்களைப் பாதிக்கிறது. "கல்வி அழுத்தம், வேலையின்மை, சமூகத் தனிமைப்படுத்தல், டிஜிட்டல் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் தீர்க்கப்படாத உணர்ச்சித் துயரம் ஆகியவற்றின் சிக்கலான கலவையே இதற்கு காரணம்.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட நபர்களின் தற்கொலைக்கு மனநல பிரச்சினைகள் மூன்றாவது முக்கிய மரணக் காரணமாக உள்ளது. இளைஞர்களிடையே உள்ள மனநல சவால்களை தாக்குப்பிடிக்க முடியாத நிலையே தற்கொலையை தூண்டுகிறது என்கிறது அந்த அறிக்கை. இது ஒரு பொது சுகாதார அவசரநிலையாக மாற்றுகிறது.
"மன அழுத்த பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப்படாமல் இருக்கும்போது, அவை பெரும்பாலும் நாள்பட்டவையாக மாறி, நீண்ட கால இயலாமைக்கும், குறிப்பிடத்தக்க சமூக சிக்கல்களுக்கும் மற்றும் பொருளாதாரச் செலவுகளுக்கும், சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கும்" என்று இந்திய மனநல மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
- எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா?
- அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது.
ஒருவர் தனக்கு மனஅழுத்தம் இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்வது? அதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பற்றி...
திடீர் அழுகை
சந்தோஷமான மனநிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று அழுகை வருகிறதா? அப்படியானால் அவர் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.
கை நடுக்கம்
எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா? அப்படியானால் அது மனஅழுத்தத்தின் அறிகுறி என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஒருவருக்கு இப்படி அடிக்கடி விரல் தானாக அசைந்தாலோ அல்லது துடித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
கண் இமை துடித்தல்
கண் இமை திடீரென்று துடிக்கிறதா? அப்படி அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே கண் இமைகள் வழக்கத்துக்கு மாறாக துடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து சோதித்துப் பார்க்க வேண்டும்.
- விபத்தில் ரமேஷ் உயிர்தப்பிய நிலையில் அவருடைய தம்பி அஜய் இந்த விபத்தில் பலியானார்.
- என் மனைவி, என் மகனுடன் என்னால் பேசமுடிவதில்லை.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தில் எமர்ஜென்சி வழிக்கு அருகில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த 40 வயதான ரமேஷ் என்ற நபர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார்.
இங்கிலாந்தில் பணியாற்றும் ரமேஷ் அந்நாட்டிலேயே வசித்து வந்தார். அன்றைய தினம் இந்தியாவிலிருந்து தம்பியுடன் நாடு திரும்பும்போது விபத்தில் சிக்கினார். விபத்தில் ரமேஷ் உயிர்தப்பிய நிலையில் அவருடைய தம்பி அஜய் இந்த விபத்தில் பலியானார். ரமேஷ் மிகவும் அதிர்ஷ்டசாலி என பலரும் கருதினர்.
விபத்து நடந்த மறுநாள் மருத்துவமனையில் ரமேஷை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் விபத்தில் இருந்து மீண்ட ரமேஷ், தனது முதுகெலும்பாக இருந்த சகோதரனை இழந்ததால், உயிர் பிழைத்தது ஒரு சாபம் போல உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தின் நினைவுகளால் பாதிக்கப்பட்டு PTSD எனப்படும் நீண்டகால மன அழுத்த நோயால் அவதிப்படுவதாகவும், தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து திரும்பிய ரமேஷ் விபத்தின் பிறகான தனது வாழ்க்கை குறித்து பிபிசி செய்தியாளரிடம் பேசுகையில், நான் மட்டுமே உயிர் பிழைத்தவன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு அதிசயம்.
நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மனைவி, என் மகனுடன் என்னால் பேசமுடிவதில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் முழு குடும்பத்திற்கும் வலி நிறைந்ததாக இருக்கிறது. என் வீட்டில் தனியாக இருக்க விரும்புகிறேன். என் அம்மா கடந்த நான்கு மாதங்களாக, ஒவ்வொரு நாளும் அறைக் கதவுக்கு வெளியே உட்கார்ந்து இருக்கிறார். நான் வேறு யாருடனும் பேசுவதில்லை. என்னால் அதிகம் பேச முடியவில்லை.
நான் இரவு முழுதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னால் சரியாக நடக்க முடியவில்லை. என் மனைவி எனக்கு உதவுகிறாள்" என்று தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த ரமேஷுக்கு ஏர் இந்தியா சார்பில் ரூ. 22 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சுத்தமாக இல்லாதது பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான முக்கிய காரணம்.
- பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட மன அழுத்தமும் காரணமாக அமைகிறது.
மாதவிடாய் காலங்களிலோ, அந்தரங்க பகுதியில் உள்ள முடிகள் அதிகமாகும்போதோ அல்லது பலநேரங்களில் நமக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும். அந்த இடத்தில் சொரியும்போது சிலநேரங்களில் காயமாகவும் மாறக்கூடும். சிலர் இதற்கு மஞ்சள் தடவுவது, தேங்காய் எண்ணெய் தடவுவது என சில வைத்தியங்களை செய்வர். ஆனால் இந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து அதை சரிசெய்ய வேண்டும். பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
பிறப்புறுப்பு அரிப்பு
பிறப்புறுப்பு அரிப்பு என்பது பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஆகும்.
பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட காரணங்கள்
சுத்தமாக இல்லாதது
இது பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மலம் கழித்த பிறகு அல்லது சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை ஒழுங்காக சுத்தம் செய்யவில்லை என்றால் அரிப்பு ஏற்படும். மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களை அடிக்கடி மாற்றவேண்டும். அதுபோல உடலுறவுக்குப் பிறகும் சுத்தம் செய்யவேண்டும். வியர்வை மற்றும் சிறுநீர், முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியா உருவாகி வீக்கத்தை ஏற்படுத்தும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால், அது வஜினிடிஸாக உருவாகலாம். அந்த நேரத்தில் பிறப்புறுப்பு பகுதி பச்சை அல்லது மஞ்சள் சளியை சுரக்கக்கூடும்.
மேலும் பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாது. ஏனெனில் இந்த முடி பிறப்புறுப்பு பகுதியை பாக்டீரியாவிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் முடியை நீக்குவது கீறல்கள் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். வேண்டுமானால் அவ்வப்போது முடியை வெட்டிக்கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வாமை
பெண்கள் அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்ய சோப்பு அல்லது வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்த ஜெல்களை பயன்படுத்தக்கூடாது. இந்த பொருட்கள் பெரும்பாலும் வலுவான காரத்தன்மை கொண்டவை. இது யோனியின் சாதாரண pH அளவை மாற்றி, வறட்சி மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கின்றன.
தோல் நோய்கள்
தோல் நோய்கள் ஏற்பட்டாலும் பிறப்புறுப்பு பகுதியில் சிவத்தல், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படலாம்.

பிறப்புறுப்பு அரிப்புக்கு மன அழுத்தமும் முக்கிய காரணமாக உள்ளது
பாலியல் ரீதியாக பரவும் நோய்கள்
ஆண்களை விட பெண்கள் பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். பிறப்புறுப்பு மருக்கள், பிறப்புறுப்பு ஹெர்பெஸ், ட்ரைக்கோமோனியாசிஸ் மற்றும் அந்தரங்கப் பேன்கள் (அந்தரங்க முடியில் வாழும் சிறிய பூச்சிகள்) போன்ற சில பொதுவான நோய்கள் உள்ளன. இந்த நோய்கள் பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன.
மன அழுத்தம்
சில ஆய்வுகள் மன அழுத்தமும் பிறப்புறுப்பு அரிப்புக்கு ஒரு காரணம் என கூறுகின்றன. நீண்டகால மன அழுத்தத்தை அனுபவிப்பவர்களுக்கு பெரும்பாலும் ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம். இந்த நேரத்தில், பாக்டீரியாக்கள் பிறப்புறுப்புகளை ஆக்கிரமித்து அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாதவிடாய் நின்ற நிலையில் உள்ள பெண்களில், நாளமில்லா சுரப்பிகள் குறைவதால் யோனி சளிச்சுரப்பி மெல்லியதாகி, பிறப்புறுப்புகள் வறண்டு அரிப்பு ஏற்படுகிறது.
- உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
- சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் மிகவும் அவசியமானது.
இப்போதெல்லாம் வேலையால் சரியான தூக்கம் இல்லை, சாப்பாடு இல்லை என பலரும் சொல்கின்றனர். ஆனால் சம்பாதிப்பதே சாப்பாடுக்காகத்தான் என்பதை மறக்கின்றனர். ஒருகட்டத்தில் உடல்நலம் பாதிக்கும்போதுதான் அதற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். நல்ல ஆரோக்கியமான உடல் நலத்திற்கென்று தனியாக எதுவும் செய்ய வேண்டாம். சத்தான சாப்பாடு, நல்ல உறக்கம் என்பதை சரியாக செய்தாலேபோதும். ஆனால் இதைத்தான் அனைவரும் செய்ய மறுக்கின்றனர்.
காலையில் அரக்க பரக்க எழுந்து, பாதி உடல் நனைந்தும், நனையாமலும் குளித்து, அரைவயிறு கூட நிரம்பாமல் அவசரமாக சாப்பிட்டு அலுவலகம் செல்கின்றனர். சிலர் அதைக்கூட சாப்பிடுவது இல்லை. பின்னர் இரவு வந்து சோம்பேறித்தனமாக இருக்கிறது எனக்கூறிவிட்டு கடையில் உணவு வாங்கி சாப்பிடுவது... இடையில் டீக்குடித்து வயிறை நிரப்பிக்கொள்வது. பின்னர் மொபைல் ஃபோனை பார்த்துக்கொண்டே நள்ளிரவில் தூங்குவது. சரியான உணவு, சரியான தூக்கம் இல்லை என்றால் மனித உடல் என்னென்ன விளைவுகளை சந்திக்கும் என்பதை பார்ப்போம்.
உணவை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்
பெரும்பாலும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் காலையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். மாணவர்கள் பசியால் சரியாக பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. பெரியவர்களும் வேலையில் கவனம் செலுத்த இயலாது. காலை உணவைத் தவிர்ப்பவர்கள், அடுத்தவேளை அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இடையில் உட்செல்லும் நொறுவைகளும் அதிகமாகும். இதனால் உடலுக்கு கிடைக்கும் கலோரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதன்மூலம் உடல் எடை உயரும். உணவைத் தவிர்ப்பதால் உடலில் சுரக்கும் 'டோபமைன்' (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும். இந்த இரண்டு ஹார்மோன்களும் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுபவை. இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், கோபத்தை காட்டுவது என இருப்போம். குளுக்கோஸிலிருந்து அதிக ஆற்றலை எதிர்பார்ப்பது மூளைதான். சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. இதனால் காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

தூக்கமின்மை தலைவலிக்கு வழிவகுக்கும்
தூக்கத்தை தவிர்ப்பதால் வரும் ஆபத்துகள்
மனதுக்கும், உடலுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். அதனால்தான் சரியாக தூங்காவிட்டால் நாம் சோர்வாக தெரிவோம். தூக்கமின்மை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மனநோய், டிமென்ஷியா, எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் போன்றவைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் முக்கிய ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை சீர்குலைக்கிறது. ஒரு நாளைக்கு எட்டு மணிநேர தூக்கம் என்பது கண்டிப்பாக அவசியமாகிறது. இந்த எட்டு மணிநேர தூக்கம் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் எனும் குறையும்போது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. ஹார்மோன் ஒழுங்குமுறையில் மாற்றம் ஏற்படுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. சரியான தூக்கம் இல்லாதது தலைவலிக்கு வழிவகுக்கும். மன அழுத்தம் ஏற்படும். தூக்கமின்மையின் போது வேலை செய்ய முயற்சிப்பது வேலை செயல்திறனை கணிசமாக பாதிக்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் உடல் முழுவதும் நடைபெறவேண்டிய செயல்முறைகள் சரியாக இருக்காது. இதனால் மூளையில் உள்ள நியூரான்கள் அதிகமாக வேலை செய்து, சிந்தனையை பலவீனப்படுத்தி, உடல் எதிர்வினைகளை மெதுவாக்கி, மக்களை உணர்ச்சி ரீதியாக சோர்வடையச் செய்கின்றன. நாள்பட்ட தூக்கமின்மை இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அனைவரும் உணவு மற்றும் உறக்கத்தில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
- மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
- சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்
பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், புற்றுநோயால் இறந்த ஒரு ராணுவ அதிகாரியின் தாய்க்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கிய உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
அந்த ராணுவ அதிகாரி அரிய வகை புற்றுநோயால் ஜூன் 24, 2009 அன்று உயிரிழந்த நிலையில் திகாரியின் தாயார் சுலோச்சனா வர்மாவுக்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று சண்டிகர் ஆயுதப்படை தீர்ப்பாயம் 2019-ல் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அண்மையில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹர்சிம்ரன் சிங் சேத்தி மற்றும் விகாஸ் சூரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், புகைபிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் புற்றுநோயைத் தவிர, ராணுவ வீரர்களிடையே ஏற்படும் அனைத்து வகையான புற்றுநோய்களும் ராணுவ சேவையுடன் தொடர்புடையதாகவே கருதப்படும். பணியில் சேரும்போது ஆரோக்கியமாக இருந்த அதிகாரி, ஆறு ஆண்டுகள் ராணுவச் சேவையில் இருந்ததால் ஏற்பட்ட நீண்டகால மன அழுத்தமே புற்றுநோய்க்குக் காரணம்" என்று தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பளித்தனர்.
- ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும்.
மனித உடலின் இயக்கத்திற்கு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் இருக்கும் பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
இதில் அட்ரீனல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோன் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
பாம்பு, கரடி போன்றவை விரட்டும்போது மனிதர்கள் ஓடி, ஆபத்து காலத்தில் உயிர் தப்பிக்க இந்த கார்டிசோல் ஹார்மோன் தூண்டுகிறது. ஒருவருக்கு மன அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் கார்டிசோல் ஹார்மோன் அதிகப்படியாக சுரக்கிறது. அது போன்ற நிலையில் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதனால் ரத்த அழுத்த பாதிப்பும், டைப்-2 வகை சர்க்கரை நோயும் உருவாகிவிடும். இந்த ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு கழுத்து பகுதியில் `எருமை திமில்' போன்ற கொழுப்பு திரட்சி நிலை காணப்படும். பொதுவாக, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்ப்பது, இன்ப துன்பங்களை சமமாக கருதும் மனநிலை, தியானம் போன்றவற்றால் இந்த கார்டிசோல் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பை கட்டுப்படுத்தலாம்.
- காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது.
- உணர்ச்சிகளை அடக்குவது தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம்.
இன்றைய அவசர உலகில் சிலர் பின்பற்றும் பழக்கங்கள் மெதுவாக கொல்லும் விஷமாக மாறக்கூடியது. குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கக்கூடியது. அத்தகைய பழக்க வழக்கங்கள் பற்றியும், அவை எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பார்போம்.
மன அழுத்தம்
நாள்பட்ட மன அழுத்தம் 'சைலண்ட் கில்லர்' (அமைதியான கொலையாளி) என்று சித்தரிக்கப்படுவதுண்டு. மன அழுத்தம் சில நிமிடங்களோ, சில நாட்களோ நீடிப்பதே சிக்கலானது. ஆனால் நாள் கணக்கில் மன அழுத்தத்துடனே இருப்பது இதய நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் மன அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்திவிட வேண்டும்.
வேலை
எந்த வேலையையும் ஆர்வமுடன் செய்ய வேண்டும். வெறுப்புடனோ, அதிருப்தியுடனோ அந்த வேலையை செய்யக்கூடாது. ஆர்வம் இல்லாமல் இருந்தால் அந்த வேலையை தொடரக்கூடாது. சிறிது ஓய்வுக்கு பிறகோ, அந்த வேலை மீது ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொண்டோ பின் செய்யலாம். ஆனால் வெறுப்புடன் வேலை செய்வது உடல் நலத்துக்கும், மன நலனுக்கும் கேடு விளைவிக்கும். தொடர் அதிருப்தியுடன் வேலை செய்வது தலைவலி, தூக்கமின்மை, செரிமான கோளாறு உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதே நிலை தொடர்ந்தால் உடலை கொல்லும் மெதுவான விஷமாக மாறிவிடும்.
நல்லெண்ணம் இன்மை
நீங்கள் பழகும் நபர்கள், உங்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்கள் உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களாக இருக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியை பாராட்டும் நல் மனம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி அல்லாமல் உங்கள் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்களாகவோ, உங்களின் செயல்பாடுகளை குறை கூறுபவர்களாகவோ, உங்கள் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். ஏனெனில் அவர்களின் செயல்பாடுகள் உங்கள் மன ஆரோக்கியத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
துரித உணவு
துரித உணவை தொடர்ந்து உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இந்த உணவுகளில் பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை அதிகமாக கலந்திருக்கும். இவை உடல் பருமன், இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கு வித்திடக்கூடும்.
உணர்ச்சிகளை அடக்குதல்
உணர்ச்சிகளை அடக்குவது தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்கான வழிமுறையாக தோன்றலாம். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் கட்டுப்படுத்துவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். மனதுக்கு பிடித்தமானவர்களின் செயல்பாடோ, நெருங்கிய நண்பர்களின் செயல்பாடோ வருத்தத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலோ, விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தாலோ தயங்காமல் அதுபற்றி விவாதித்துவிட வேண்டும். அதைவிடுத்து உணர்ச்சிகளை அடக்குவது மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து மன நோயாக மாறக்கூடும். அதற்கு இடம் கொடுக்காமல் உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவது முக்கியம்.
காலை உணவைத் தவிர்த்தல்
காலை உணவு அன்றைய நாளின் முக்கியமான உணவாக கருதப்படுகிறது. அதனை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பு, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு, அறிவாற்றல் குறைபாடு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
கவலையாக இருத்தல்
நாள்பட்ட பதற்றம் என்று அழைக்கப்படும் தொடர்ச்சியான மனக்கவலை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அடிக்கடி கவலையில் ஆழ்ந்திருப்பது மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் அளவை உயர்த்த வழிவகுக்கும். காலப்போக்கில் கார்டிசோல் ஹார்மோன் அதிகரிப்பது உடல் பருமன், ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தியின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டுபண்ணும்.
சோர்வாக இருத்தல்
சுய பராமரிப்பு முக்கியமானது. தினமும் குளிப்பது, முகம் கழுவுவது, கை, கால்களை கழுவுவது என உடலை எந்த அளவுக்கு சுத்தமாக பராமரிக்கிறோமோ அதுபோல் மன ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால் உடல் மற்றும் உணர்வு இரண்டும் சோர்வுக்குள்ளாகிவிடும். இத்தகைய நாள்பட்ட சோர்வு இதய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
வெகுமதி அளிக்காதிருத்தல்
ஏதேனும் ஒரு செயலை நீங்கள் சிறப்பாக செய்து முடித்துவிட்டதாக தோன்றினால் மற்றவர்கள்தான் உங்களை பாராட்ட வேண்டும், வெகுமதி அளிக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது. உங்களை நீங்களே பாராட்டி வெகுமதி அளித்துவிட வேண்டும். உங்களுக்கு பிடித்தமான பொருளை பரிசாக உங்களுக்கே வழங்கி ஆனந்தப்படலாம். உங்கள் செயல்பாடுகளை பாராட்டாமல் கடந்து செல்வதும் சோர்வையும், வாழ்க்கை மீது ஈர்ப்பு இல்லாத நிலையையும் ஏற்படுத்தலாம். நாளடைவில் மெதுவாக கொல்லும் விஷம் போல் மாறி விரக்தியை ஏற்படுத்திவிடும். உடல்நல பிரச்சனைகளையும் உண்டுபண்ணும்.
- அலுவலகத்திற்குச் செல்வதைக் குறிப்பிடும்போது அடிக்கடி கோபப்படுகிறார்கள்.
- உலகப் பொருளாதாரம் 438 பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மக்கள் காலையிலிருந்து மாலை வரை அலுவலகத்திற்குச் செல்கிறார்கள், ஆனால் அவர்களில் தங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் மிகக் குறைவு.
குறிப்பாக இந்தியாவில் ஏராளமான ஊழியர்கள் தங்கள் வேலைகளில் அதிருப்தி அடைந்துள்ளதாக சமீபத்திய அறிக்கை காட்டுகிறது.
சமீபத்தில் Gallup உலகளாவிய பணியிடத்தின் நிலை 2025 அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை உலகின் பணி கலாச்சாரத்தைப் பற்றி சொல்கிறது.
தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள ஊழியர்கள் பணி அழுத்தத்தை உணர்கிறார்கள் என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
வாரத்தின் தொடக்கமான திங்கட்கிழமை முதல் ஊழியர்கள் கவலையுடன் இருக்கிறார்கள். மேலும் அலுவலகத்திற்குச் செல்வதைக் குறிப்பிடும்போது அடிக்கடி கோபப்படுகிறார்கள்.
இந்த விஷயங்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, இந்த முறையில் அலுவலகத்திற்குச் செல்வது, கோபப்படுவது, எரிச்சலடைவது, விடுப்புக்காகக் காத்திருப்பது, அலுவலகத்தில் பணியாளரின் ஈடுபாடு குறைவதற்கு வழிவகுக்கிறது.
உலகெங்கிலும் உள்ள ஊழியர்கள், குறிப்பாக மேலாளர்கள், அலுவலகத்துடனான ஈடுபாட்டை விரைவாக இழந்து வருவதாக கேலப்பின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் 2024 ஆம் ஆண்டில், பணியாளர் ஈடுபாடு 23% ஆக இருந்தது, இப்போது 21% ஆகக் குறைந்துள்ளது.
ஊழியர் ஈடுபாடு வெறும் இரண்டு சதவீதம் குறைவது உற்பத்தித்திறனில் பெரும் குறைவை ஏற்படுத்தும் என்றும், உலகப் பொருளாதாரம் 438 பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணியாளர் ஈடுபாடு கடந்த ஆண்டு 33 சதவீதமாக இருந்தது. இப்போது அது 30 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவிலும், ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்குச் செல்லும்போது மன அழுத்தத்தையும் கோபத்தையும் உணர்கிறார்கள்.
கணக்கெடுக்கப்பட்ட மக்களில் 30% பேர் தினமும் மன அழுத்தத்தை அனுபவிப்பதாகக் கூறினர். இந்திய ஊழியர்களில் 34% பேர் தினமும் வேலைக்குச் செல்லும்போது கோபமாகவும் மன அழுத்தமாகவும் உணர்கிறார்கள், அதேசமயம் சீனாவில் இது 18% மட்டுமே, பின்லாந்தில் 6% ஊழியர்கள் மட்டுமே வேலைக்குச் செல்லும்போது கோபமாகவும் மன அழுத்தமாகவும் உணர்கிறார்கள்.
இந்திய ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் புதிய வேலை வாய்ப்புகளைத் தேடுவதாகவும் கேலப் அறிக்கை கண்டறிந்துள்ளது. இது அவர்கள் வகிக்கும் பதவி அல்லது அவர்கள் தற்போது வகிக்கும் பதவியில் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதைக் குறிக்கிறது. 49% இந்தியர்கள் புதிய வேலையைத் தீவிரமாகத் தேடுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
- சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது.
இன்றைய அவசர யுகத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஏறக்குறைய ஆண்கள் பார்க்கும் அனைத்துப் பணிகளையும் பெண்களும் மேற்கொள்கின்றனர். ஒரே அலுவலகத்தில், ஆண்கள் செய்யும் அதே வேலையை செய்யும் பெண்களுக்கு, மன அழுத்தம் அதிகம் ஏற்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
எனவே, ஆண்களைப் போலவே பெண்களும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பணிக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
பெண்களுக்கோ தாமதமாகும் திருமணம், குடிகாரக் கணவர், உறவினருடன் சுமுக உறவு இல்லாதது என பல பிரச்சினைகள் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றன. முதியவர்கள் தனிமை, வெறுமை, இழப்பு, பண நெருக்கடி, நலிந்துவரும் உடல் நிலை போன்றவற்றால் மன அழுத்தம் வந்து அவதிப்படுகிறார்கள்.
இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.
நடுத்தர மற்றும் உயர்மட்ட மேலாண்மை பணியில் உள்ள 6 சதவீத பெண்கள், பணியின் காரணமாக, ஆண்களைவிட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அலுவலகத்தில், சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளையும், அலுவலகப் பிரச்சினைகளையும் போட்டு குழப்பிக்கொள்வது, மேலதிகாரிகள் மரியாதையின்றி நடத்துவது, சக ஊழியர்கள் தோற்றம் பற்றி பேசுவது, எதிர்காலம் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
சிலருக்கு காரணமே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுகிறது. பெண்கள் தங்கள் பணியை விரைவாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க விரும்புகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பிலோ, சக ஊழியர்கள் மட்டத்திலோ சரியான ஒத்துழைப்பு கிடைக்காத போது, துவண்டு விடுகின்றனர்.
மேலும், தங்கள் லட்சியத்தை அடைவதற்காக, தங்கள் சொந்த வாழ்க்கையையும், அலுவலக பணிகளையும் பக்குவமாக கையாளுகின்றனர். எனினும், ஒரே பணி, வசதி வாய்ப்புகள் ஆகியவை ஆண், பெண் இருவருக்கும் சமமாக அளிக்கப்பட்டாலும், ஆண்களைவிட பெண்களுக்கு மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது.
- மனதில் குழப்பம் ஏற்படும் போது செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.
- மனஇறுக்கத்தை உடைக்க நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.
மனித உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. எதையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு திறமையும், ஆற்றலும் பெற்று உள்ளனர். அது என்ன என்று கண்டறிந்து வாழ்க்கையில் பலரும் உயர்ந்த நிலையை அடைகின்றனர். ஆனால் எதிர்பாராத நிகழ்வுகளில் எடுக்கும் சில முடிவுகள் சிலரது வாழ்க்கையின் திசையை அடியோடு மாற்றி விடுகிறது.
எனவே எந்த நிலையிலும் நிதானமாக, மன சமநிலையுடன் செயல்பட வேண்டியது அவசியம். ஆனாலும் பல நேரங்களில் நிதானம் தவறி ஆத்திரத்தில், விரக்தியின் உச்சத்தில் செய்யும் செயல்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதாவது தங்களின் உயிரை தானே மாய்த்து கொள்ளுதல் அல்லது மற்றவரின் உயிரை பறிப்பதாகவும் அமைந்து விடுகிறது.
இதற்கு உளவியல் சிக்கலே காரணமாக உள்ளது. ஒரு பிரச்சினையில் சிக்கி தவித்து, அதில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் சிலர் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். அது தற்கொலையாக, கொலையாக மாறி விடுகிறது.
தேசிய குற்ற ஆவண காப்பகம்
உளவியல் சிக்கல்களை சந்திக்கும் நபர்கள் வேறுபட்ட சமூக, பொருளாதார, வாழ்வியல் நிலைகளில் இருக்கிறார்கள். அவர்க ளின் தவறான முடிவுகள், தனிப்பட்ட அவர்களது குடும்பத்தை மட்டுமின்றி சமூகத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே கொலை, தற்கொலை என்பது சமூகத்தில் தடுக்க முடியாத பெரும் நோயாக மாறி விட்டது. அதன் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம் (2021-ம் ஆண்டு) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.
அந்த வகையில், நாட்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்து உள்ளனர். இதில், மராட்டியத்தில் 22,207 பேர், தமிழ்நாட்டில் 14,965 பேர், மத்திய பிரதேசத்தில் 14,965 பேர் தற்கொலை செய்தனர். அதாவது 2021-ல் ஒரு லட்சம் பேரில் சராசரி 26 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியாவில் மொத்தம் 29,272 கொலைகள் நடந்து உள்ளது. இதில் மத்திய பிரதேசத்தில் 3717 பேர், பீகாரில் 2799 பேர், மராட்டியத்தில் 2330 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1686 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். 2022-ம் ஆண்டு 7 மாதங்களில் மட்டும் 940 கொலைகள் நடந்து உள்ளன.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக 6,064 குற்றங்களும், பெண்களுக்கு எதிராக 8,501 குற்றங்களும், முதியவர்களுக்கு எதிராக 1841 குற்றங்களும். பட்டியலினத்தவருக்கு எதிராக 1377 குற்றங்களும், பழங்குடியினருக்கு எதிராக 39 குற்றங்களும் நடைபெற்று உள்ளது.
தற்கொலைக்கு குடும்ப பிரச்சினையே மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதில் கவலை கொள்ளும் அளவுக்கு 18 முதல் 45 வயதினர் வரை தற்கொலை அதிகமாக உள்ளது. இது போல் குழந்தைகளை கொன்று குடும்பத்துடன் தற்கொலை செய்வதும் சமூகத்தில் விபரீத முகத்தை காட்டுவதாக இருக்கிறது.
காரணம் என்ன?
பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் மேம்பட்ட நகரமான மும்பையில் தான் நாட்டிலேயே தற்கொலைகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் குடும்ப பிரச்சினை, தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு, தொழில் பிரச்சினைகள், தோல்வி, மது, போதை பழக்கம், நோய் போன்றவை தற்கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும் அதில் இருந்து மீண்டு வர ஏராளமான வழிகள் உள்ளன. ஆனாலும் உளவியல் ரீதியாக சமூகத்தில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்பவர்கள் தன்னையே அழித்துக் கொள்ளும் விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். அது போல் சமூகத்தின் மீதான ஆத்திரத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதற்கு அவர்களின் உளவியல் சிக்கல்களே காரணமாக இருக்கிறது.
(பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு பதிலான வாழ்வில் இருந்து விடுபடுவதில் எந்த பயனும் இல்லை. எனவே பிரச்சினை களை எதிர்கொள்ள இளம்வயதினருக்கு கற்றுத் தர வேண்டும். நல்லவை, கெட்டவைகளை எடுத்து கூறி அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். இதுவே தற்போதைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும் என்ற மனநிலை இளைஞர்களிடம் பரவிக் கிடக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்வில் தோல்வி, அவமானம், தடைகள், இழப்பு களை தாங்கியும் தாண்டியும் தான் முன்னேறி செல்ல வேண்டியது இருக்கிறது. அதற்குரிய மனநிலையை வளர்த்து கொண்டால் துயரமான முடிவுகளை சந்திக்கும் நிலை ஏற்படாது.)
எனவே எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவும், தோல்வியை கடந்து செல்லவும் உளவியல் ரீதியாக தயார் ஆகி விட்டால் மனித வாழ்வு மேம்பட்டதாக மாறி விடும்.
மனஅழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள்
எந்த ஒன்றும் இறுதியானது அல்ல. எதில் இருந்தும் மீண்டு வர முடியும். எந்தவிதமான இழப்புகளையும் ஈடுசெய்ய மாற்று வழிகள் உள்ளன. மன உளைச்சல் ஏற்படும் போது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மனஅழுத்தம் நீடித்தால் தூக்கமின்மை, ரத்த அழுத்தம், சோர்வு உள்பட உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு நோயில் தள்ளி விடும்.
எனவே மனதை சம நிலையில் வைத்துக் கொள்ள புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். சிந்தனை, செயல்பாடு மற்றும் வாழ்க்கை நடைமுறையிலும் மாற்றம் செய்தால் மனஉளைச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
மனஅழுத்தம் தோன்றினால் கார்ட்டிசோல் என்ற ஹார்மோன் உடலில் அதிகமாக சுரக்கும். ஆனால் சிரிக்கும் போது கார்ட்டிசோல் சுரப்பு குறைந்து விடும். மூளையை தூண்டுவதற்கு உதவும் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். எனவே சிரிப்பு என்பது அறிவியல் ரீதியான மருந்து என்பதை உணர வேண்டும்.
மனநல ஆலோசனை
உடற்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சி, இசை, சினிமா, பொழுது போக்கு, விளையாட்டு மட்டுமின்றி சரியான நேரத்துக்கு சாப்பிடு வது, 8 மணி நேரம் தூங்குவது போன்றவற்றை கடை பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் மன அழுத்தம் குறையும். எந்த கேள்வியையும் புன்னகையுடன் எதிர்கொள்ள வேண்டும். கோபத்தோடும், வெறுப்போடும் எதை அணுகினாலும் தோல்வியே கிடைக்கும். எனவே பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் பதற்றமின்றி நிதானமாக செயல்பட வேண்டும்.
அவசரத்தில் எதையும் பேசி விடவோ, எந்த முடிவுகளையும் எடுத்து விடவோ கூடாது. மனஇறுக்கத்தை உடைக்க நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். மனம் குழப்பம் ஏற் படும் போது தங்களுக்கு பிடித்த லட்சிய வாசகங்களை நினைவில் கொண்டு தைரியமாக செயல்பட வேண்டும். தீவிர மனஅழுத்தம் ஏற்பட்டால் உரிய மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மனதில் குழப்பம் ஏற்படும் போது செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். எனவே பிரச்சினைகள் ஏற்படும் போது அதை சரியான வகையில் அணுகி தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும். அதற்கு மாறாக பிரச்சினைகளில் மூழ்கி குழப்பிக் கொண்டால் முடிவுகள் விபரீதமாகவே இருக்கும். எனவே எதையும் தீவிரமாக ஆராய்ந்து செயல்பட்டால் யாருக்கும் சிக்கல் இன்றி மற்றவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நீரோடை போல் வாழ்வு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.






