நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா? எப்படித் தெரிந்துகொள்வது?

எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா?அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா? எப்படித் தெரிந்துகொள்வது?
Published on

ஒருவர் தனக்கு மனஅழுத்தம் இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்வது? அதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பற்றி...

திடீர் அழுகை

சந்தோஷமான மனநிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று அழுகை வருகிறதா? அப்படியானால் அவர் மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

கை நடுக்கம்

எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா? அப்படியானால் அது மனஅழுத்தத்தின் அறிகுறி என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஒருவருக்கு இப்படி அடிக்கடி விரல் தானாக அசைந்தாலோ அல்லது துடித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

கண் இமை துடித்தல்

கண் இமை திடீரென்று துடிக்கிறதா? அப்படி அடிக்கடி துடித்தால், ஒருவர் மனஅழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே கண் இமைகள் வழக்கத்துக்கு மாறாக துடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து சோதித்துப் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com