என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்
Byமாலை மலர்20 Sep 2019 5:06 AM GMT (Updated: 20 Sep 2019 5:07 AM GMT)
தலை முடி நன்கு வளர, இந்த செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல பலனளிக்கக்கூடியது. இந்த செம்பருத்தி எண்ணெயை இயற்கையான முறையில், எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
செம்பருத்தி எண்ணெய் தலை முடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று பலவகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல தீர்வினை வழங்குகிறது. தலை முடி நன்கு வளர, இந்த செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல பலனளிக்கக்கூடியது. இந்த செம்பருத்தி எண்ணெயை இயற்கையான முறையில், நம் வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள்:
செம்பருத்தி பூ - 10
செம்பருத்தி இலை - 10
தேங்காய் எண்ணெய் - 1/2 லிட்டர்
வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
இந்த செம்பருத்தி எண்ணெய் செய்வதற்கு பிரஷ் ஆன 10 சிவப்பு செம்பருத்தி பூக்களும், 10 செம்பருத்தி இலைகளையும் பொடிதாக நறுக்கி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
பின்பு அதனுடன் சிறிதளவு வேப்பிலையை சேர்க்கவேண்டும். வேப்பிலை பொடுகு பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. தங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால் எண்ணெயில் சிறிதளவு வேப்பிலையை சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் சேர்த்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
பிறகு இந்த எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை தலை முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்து, தலை முடி நன்கு வளர உதவுகிறது. செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை போன்றவை நன்றாக எண்ணெயில் சேர்ந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்பு இந்த செம்பருத்தி எண்ணெயை நன்றாக ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெயை தலையில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலைகுளிக்க வேண்டும். அல்லது தலை குளிப்பதற்கு முன் இந்த செம்பருத்தி எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து அதாவது 1/2 மணி நேரம் கழித்து, பின்னர் தலை குளிக்கவும்.
தாங்கள் இந்த செம்பருத்தி எண்ணெயை தினசரி பயன்படுத்தும் கூந்தல் எண்ணெயாக கூட பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
செம்பருத்தி (hibiscus oil) தலை முடி வளர்ச்சியை தூண்டும், உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்யும், கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும், தலை முடி அடர்த்தியை அதிகரிக்கும், பொடுகு தொல்லையை சரி செய்யும், தலை அரிப்பு மற்றும் நரைமுடிகளை தடுக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:
செம்பருத்தி பூ - 10
செம்பருத்தி இலை - 10
தேங்காய் எண்ணெய் - 1/2 லிட்டர்
வேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
இந்த செம்பருத்தி எண்ணெய் செய்வதற்கு பிரஷ் ஆன 10 சிவப்பு செம்பருத்தி பூக்களும், 10 செம்பருத்தி இலைகளையும் பொடிதாக நறுக்கி, மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, அரைத்த கலவையை எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
பின்பு அதனுடன் சிறிதளவு வேப்பிலையை சேர்க்கவேண்டும். வேப்பிலை பொடுகு பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. தங்களுக்கு பொடுகு பிரச்சனை இருந்தால் எண்ணெயில் சிறிதளவு வேப்பிலையை சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் சேர்த்துக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
பிறகு இந்த எண்ணெயில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை தலை முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்து, தலை முடி நன்கு வளர உதவுகிறது. செம்பருத்தி, கறிவேப்பிலை, வேப்பிலை போன்றவை நன்றாக எண்ணெயில் சேர்ந்ததும், அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்பு இந்த செம்பருத்தி எண்ணெயை நன்றாக ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெயை தலையில் தேய்த்து, சிறிது நேரம் மசாஜ் செய்து காலையில் தலைகுளிக்க வேண்டும். அல்லது தலை குளிப்பதற்கு முன் இந்த செம்பருத்தி எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து அதாவது 1/2 மணி நேரம் கழித்து, பின்னர் தலை குளிக்கவும்.
தாங்கள் இந்த செம்பருத்தி எண்ணெயை தினசரி பயன்படுத்தும் கூந்தல் எண்ணெயாக கூட பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
செம்பருத்தி (hibiscus oil) தலை முடி வளர்ச்சியை தூண்டும், உதிர்ந்த முடிகளை மீண்டும் வளர செய்யும், கூந்தல் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும், தலை முடி அடர்த்தியை அதிகரிக்கும், பொடுகு தொல்லையை சரி செய்யும், தலை அரிப்பு மற்றும் நரைமுடிகளை தடுக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X