என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடல் எடையை குறைக்கும் சோயா காய்கறி ஊத்தப்பம்
Byமாலை மலர்7 March 2018 3:02 AM GMT (Updated: 7 March 2018 3:02 AM GMT)
எடையைக் குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. இன்று சோயா பீன்ஸ் வைத்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா பீன்ஸ் - அரை கப்,
கடலைமாவு - அரை மேஜைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை - அரை கப்,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
ப.மிளகாய், இஞ்சி, விழுது - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
துருவிய கேரட், முட்டை கோஸ் - ¼ கப்
செய்முறை :
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோயா பீன்ஸ், முதல் நாள் இரவே ஊறவைத்து, மைய அரைத்து கொள்ளவும்
அடுத்த நாள் காலையில் கடலைமாவு, உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தடிமனாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை அகியவற்றை தூவவும். தோசைக் கரண்டியால் லேசாக அழுத்தி விடவும்.
ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான சோயா காய்கறி ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சோயா பீன்ஸ் - அரை கப்,
கடலைமாவு - அரை மேஜைக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை - அரை கப்,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
ப.மிளகாய், இஞ்சி, விழுது - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - 2,
துருவிய கேரட், முட்டை கோஸ் - ¼ கப்
செய்முறை :
புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சோயா பீன்ஸ், முதல் நாள் இரவே ஊறவைத்து, மைய அரைத்து கொள்ளவும்
அடுத்த நாள் காலையில் கடலைமாவு, உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து, மாவை தடிமனாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை அகியவற்றை தூவவும். தோசைக் கரண்டியால் லேசாக அழுத்தி விடவும்.
ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
சத்தான சோயா காய்கறி ஊத்தப்பம் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X