என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பொது மருத்துவம்
கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்
- கோடை காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும்.
- ஒவ்வொரு பருவகால பழங்களுக்கும் தனித்தன்மை உண்டு.
கோடை காலத்தில் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியமானது. பருத்தி ஆடை அணிந்து, சருமத்தில் சன்ஸ்கிரீன் பூசி வெளிப்புற உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதுபோல் உட்புற உடல் நலனையும் பேண வேண்டும். உணவு பழக்க வழக்கங்களில் ஒருசில தவறுகளை தவிர்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.
தண்ணீர் அருந்தாமல் இருப்பது:
கோடை காலத்தில் மட்டுமல்ல எல்லா பருவ காலங்களிலும் உடலில் நீரிழப்பை தவிர்க்க போதிய அளவில் தண்ணீர் பருக வேண்டும். இருப்பினும் கோடை காலத்தில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் பருக வேண்டும். அத்துடன் பழ ஜூஸ்கள், நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழ வகைகள், திரவ வகை உணவுகளை தவிர்க்காமல் உட்கொள்ள வேண்டும்.
உப்பு நிறைந்த தின்பண்டங்களை உட்கொள்வது:
கோடை காலத்தில் உப்பு அதிகம் கலந்த திண்பண்டங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ்கள், குக்கீஸ்களை உட்கொள்ளும்போது அதில் இருக்கும் உப்பு உள்ளடக்கத்தை நீர்த்துப்போக செய்வதற்கு உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அதன் காரணமாக நீரிழப்பு ஏற்படும். இதனை தவிர்க்க உப்பு நிறைந்த தின்பண்டங்களை ஒதுக்கிவைப்பதுதான் சரியானது.
அதிக கலோரி கொண்ட பானங்களை உட்கொள்வது:
கோடை காலத்தில் ஏற்படும் தாகத்தை தணிப்பதற்கு குளிர்பானங்களைத்தான் பலரும் நாடுவார்கள். அதிக கலோரி கொண்ட பானங்களை தவிர்ப்பதுதான் நல்லது. இளநீர், பதநீர், நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ் போன்ற இயற்கை பானங்களை பருகலாம்.
பருவகால பழங்களை புறக்கணிப்பது:
ஒவ்வொரு பருவகால பழங்களுக்கும் தனித்தன்மை உண்டு. அவை பருவகால நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். உடல் உபாதை பிரச்சினைகளையும் தவிர்க்கச்செய்யும். இந்த கோடை காலத்தில் கிடைக்கும் தர்பூசணி, மாம்பழம், கிர்ணி போன்றவற்றை ஒரு போதும் தவிர்க்கக் கூடாது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்