என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கால்பந்து
அர்ஜென்டினா ரசிகர்கள் மீது தடியடி: மைதானத்தை விட்டு வெளியேறிய மெஸ்சி
- ரசிகர்கள் அடிதடியில் ஈடுபட்டதால் சக வீரர்களுடன் வெளியேறினார் மெஸ்சி.
- மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து அரைமணி நேரம் கழித்து போட்டி தொடங்கியது.
உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது. தென்அமெரிக்கா நாடுகளுக்கான தகுதிச் சுற்று ஒன்றில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் மோதின.
இந்த போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் நடைபெற்றது. தென்அமெரிக்காவின் தலைசிறந்த இரண்டு அணிகள் மோதியதால் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவை சேர்ந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து இருந்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அப்போது திடீரென கேலரில் இருநாட்டு ரசிகர்களும் மோதிக் கொண்டனர். அப்போது மோதலை முடிவுக்கு கொண்டு வர போலீசார், அர்ஜென்டினா ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மெஸ்சி, தனது சக வீரர்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
நடுவரிடம் நாங்கள் விளையாட தயாராக இல்லை. வெளியேறுகிறோம் எனக் கூறி சென்றுவிட்டார். பின்னர், மோதல் முடிவுக்கு வந்தது. இதனால், சுமார் அரைமணி நேரம் போட்டி நடைபெறவில்லை. பின்னர் மெஸ்சி விளையாட சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அரைமணி நேரம் தாமதமாக போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் அர்ஜென்டினா 1-0 என வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் நிக்கோலஸ் ஒடாமெண்டி 63-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இதற்கு முன் கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை 1-0 என அர்ஜென்டினா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Horrible scenes in the stands prior to Brazil vs Argentina. pic.twitter.com/ZluK2yQI4b
— Alexi Lalas (@AlexiLalas) November 22, 2023
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்