என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ஒன்று அல்லது 2மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும்.
    • ரஷியாவின் எண்ணையை லாபம், வருவாய்க்காக மட்டுமே இந்தியா வாங்குகிறது.

    அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவுடன் வர்த்தக மோதலை துணிச்சலாக பார்க்கிறோம். ஏனென்றால் மிகப்பெரிய வாடிக்கையாளருடன் சண்டையிடுவது நன்றாக இருக்கிறது. ஆனால் இறுதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படும். விரைவில் அமெரிக்காதான் தேவை என்று சொல்வார்கள்.

    50 சதவீத வரியை நீக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒன்று அல்லது 2மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும். அவர்கள் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்பார்கள். டிரம்புடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பார்கள். வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயற்சிக்கும்போது, மோடியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்வார்"என்றார்.

    அதேபோல் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறுகையில்,"இந்தியா விதிக்கும் அதிகபடியான வரியால் அமெரிக்க வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன். ரஷியாவின் எண்ணையை லாபம், வருவாய்க்காக மட்டுமே இந்தியா வாங்குகிறது.

    ரஷியாவின் போர் இயந்திரத்திற்கு உணவளிக்கிறது. போரில் உக்ரேனியர்கள், ரஷ்யர்கள் இறக்கின்றனர். அமெரிக்க வரி செலுத்துவோர் அதிகமாக செலவிடுகிறார்கள்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரே எழுதிப் பாடியுள்ள 'எஞ்சாமி தந்தானே' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.

    இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை இன்று மாலை 6 மணி முதல் வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
    • தொடக்கம் முதலே எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை அதிரடியாக விளையாடினர்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் எரின் ரூட்லிப்- கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை, டெய்லர் டவுன்சென்ட் - கட்டெரினா சினியாகோவா ஜோடியுடன் மோதியது.

    இதில், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை 6- 4 மற்றும் 6- 4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
    • அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

    இதன்பின்னர், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஈரோடு மாவட்ட ஆதரவாளர்கள் 7 பேரையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    இந்நிலையில், அதிமுகவின் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அந்த பொறுப்புக்கு தற்காலிகமாக ஏ.கே.செல்வராஜ் நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு புழகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏ.கே.செல்வராஜ் (கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

    கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக்கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கைதிகளை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், அனக்கப்பள்ளி மாவட்டம், சோடவரத்தில் கிளை சிறை உள்ளது. இந்த சிறையில் வீரராஜு என்பவர் வார்டனாக வேலை செய்து வருகிறார்.

    சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    ஓய்வூதிய பண மோசடி வழக்கில் ரவிக்குமார், திருட்டு வழக்கில் பெஜவாடா ராமு ஆகியோரை போலீசார் கைது செய்து இந்த ஜெயிலில் அடைத்தனர்.

     

    நேற்று மாலை ஜெயிலில் நுழைவு வாயில் அறையில் வார்டன் வீரராஜு இருந்தார். அப்போது ரவிக்குமார், ராமு இருவரும் சேர்ந்து சினிமா பாணியில் சுத்தியலால் வீரராஜு தலையில் சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில் நிலை குலைந்து போன வீரராஜு வலி தாங்க முடியாமல் அலறியபடி மயங்கி சரிந்து கீழே விழுந்தார். அவரது பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்தனர். கைதிகள் இருவரும் முன்பக்க கதவை திறந்து தப்பி ஓடினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கைதிகளை தேடி வருகின்றனர். கைதிகள் வார்டன் ராஜுவை தாக்கும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் ஏராளமான உபகரணங்களை வழங்கியுள்ளது.
    • இந்த ஸ்கூட்டர் மணிக்கு 104 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் என்று டிவிஎஸ் கூறுகிறது.

    டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட என்டார்க் 150 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய என்டார்க் 150 மாடலின் விலை ரூ. 1.19 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப்-எண்ட் மாடலில் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே போன்ற சில சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. அந்த வேரியண்ட் விலை ரூ. 1.29 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளது.

    இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், ஸ்டைலிங்கில் தொடங்கி, குறிப்பிடத்தக்க வகையில் புதியதாகவும் தனித்துவமாகவும் தெரிகிறது. இதில் எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் இன்டிகேட்டர்கள், குவாட் LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் ஆக்ரோஷமாக வடிவமைக்கப்பட்ட பாடி பேனல்கள் உள்ளன. டெயில் லைட்கள் கூட ஸ்கூட்டருக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்கும் பிளவு அமைப்பைக் கொண்டுள்ளன.

    பாடிவொர்க்கைப் பொறுத்தவரை, ஸ்கூட்டரில் என்டார்க் 125-இன் அதே சேசிஸ் உள்ளது. ஸ்கூட்டரின் இரு முனைகளிலும் 12 இன்ச் சக்கரங்கள் உள்ளன. இதற்கிடையில், பிரேக்கிங்கை முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒற்றை-சேனல் ABS ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்கூட்டரில் 149.7cc, ஏர்-கூல்டு, மூன்று-வால்வுகள் கொண்ட ஒற்றை-சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 13bhp பவர் மற்றும் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த எஞ்சின் CVT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 104 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் என்று டிவிஎஸ் கூறுகிறது.

    டிவிஎஸ் நிறுவனம் இந்த ஸ்கூட்டரில் ஏராளமான உபகரணங்களை வழங்கியுள்ளது. ஃபுல் எல்இடி லைட்களைத் தவிர, இந்த ஸ்கூட்டரின் டாப்-வேரியண்டில் ஃபுல் TFT டிஸ்ப்ளே உள்ளது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்ட்ரீட், ரேஸ் என இரு ரைட் மோட்கள் உள்ளன.

    டிவிஎஸ் என்டார்க் 150 இந்த பிரிவில் முதன்முறையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக் லீவர்களையும் கொண்டுள்ளது. புதிய டிவிஎஸ் என்டார்க் மாடலுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன, விரைவில் டெலிவரிகளும் தொடங்கும்.

    • ஹூண்டாய் நிறுவனம் நைட் எடிஷன் அம்சங்களை i20 N லைன் மாடலுக்கும் நீட்டித்துள்ளது.
    • இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது DCT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாய் நிறுவனம் i20 நைட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதன் நைட் எடிஷன் மாடல்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. ரூ. 9.15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கும் இந்த சிறப்பு மாடல், i20-யின் பிரபலத்தை அடிப்படையாகக் கொண்டு, இருண்ட, ஸ்போர்ட்டியர் தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய i20 நைட் எடிஷன் ஸ்போர்ட்ஸ் (O) மற்றும் அஸ்டா (O) வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இந்த எடிஷனில் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள், சைடு சில், வெளிப்புற கண்ணாடிகள், பின்புற ஸ்பாய்லர் மற்றும் மேட் பிளாக் நிறத்தில் ஹூண்டாய் லோகோ உள்ளிட்ட பல பிளாக்-அவுட் அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள், பிரத்யேக நைட் லோகோ மற்றும் ஸ்போர்ட் மெட்டல் பெடல்களை கொண்டுள்ளது. உள்புறம் கேபினில் பிரான்ஸ் இன்சர்ட்களுடன் ஃபுல் பிளாக் தீம் மற்றும் பிரான்ஸ் சிறப்பம்சங்களுடன் பிளாக் நிற இருக்கை மேற்கவர்கள் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் நைட் எடிஷன் அம்சங்களை i20 N லைன் மாடலுக்கும் நீட்டித்துள்ளது. அதன்படி N8 மற்றும் N10 வேரிண்ட்களில் கிடைக்கும், i20 N லைன் நைட் எடிஷனின் விலை ரூ. 11.43 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

    தோற்றம் தவிர்த்து மெக்கானிக்கல் அம்சங்களில், இரண்டு மாடல்களும் மாறாமல் உள்ளன. i20 அதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, i20 N லைன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பயன்படுத்துகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது DCT யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ஹூண்டாயின் ஹேட்ச்பேக் வரிசையில் உள்ள ஸ்டாண்டர்ட் மற்றும் N லைன் மாடல்களுடன் i20 நைட் மாடல் இடம்பெறும்.

    • 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.
    • மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி மதிப்பில் முதலீடுகள் கிடைத்துள்ளன. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன.

    மின்சார வாகனத்துறையில், இங்கிலாந்தின் இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் இந்துஜா குழுமம் முதலீடு செய்வதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாகும்.

    இவை வெறும் எண்ணிக்கை அல்ல, வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இது தான் திராவிட மாடல் அரசின் உத்வேகம் என்று பதிவிட்டுள்ளார்.



    • இந்த மாற்றங்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது.
    • சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை 12% முதல் 5% அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைகிறது.

    56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாற்றங்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.48,000 கோடி இழப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு மதிப்பிட்டிருந்தது.

    ஆனால் இந்த மாற்றங்களால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.3,700 கோடி மட்டுமே இழப்பு ஏற்படும் என்று ஸ்டேட் வங்கி மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக எஸ்பிஐ வெளியிட்ட அறிக்கையில், இந்த சீர்திருத்தங்கள் நுகர்வு அதிகரிக்வும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று கூறியுள்ளது.

    சுமார் 295 அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை 12% முதல் 5% அல்லது பூஜ்ஜிய சதவீதமாகக் குறைப்பது சில்லறை பணவீக்கத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்று அதில் குறிப்பிடடுள்ளது.

    மேலும் வருடம் ரூ.3,700 கோடி இழப்பு என்பது மிகக் குறைவாக இருப்பதால், நிதிப் பற்றாக்குறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த சந்தர்ப்பத்தில் ஏஐ துறையில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
    • அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

    அமெரிக்காவின் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு அதிபர் டிரம்ப் கடந்த நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் இரவு விருந்து வைத்தார்.

    இந்த சந்தர்ப்பத்தில் ஏஐ துறையில் முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் இதில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விருந்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க் பங்கேற்கவில்லை. அவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

    இந்நிலையில் இதுகுறித்து ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் பேசிய மஸ்க், அதிபர் டிரம்பின் நிர்வாகத்திடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக அவர் கூறினார்.

    இருப்பினும், தவிர்க்க முடியாத காரணங்களால் தான் செல்ல முடியவில்லை என்றும் தனக்கு பதிலாக தனது நிறுவனத்திலிருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பியதாக மஸ்க் கூறினார். நெருங்கிய நண்பர்களாக இருந்த மஸ்க் - டிரம்ப் அண்மையில் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.  

    • தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • என்றென்றும் பெரியார்-ன் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்!

    லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், தந்தை பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில் இரண்டு நூல்களையும் அவர் வெளியிட்டார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டார்.

    இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆக்ஸ்போர்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கருத்தரங்கு! தந்தை பெரியார் நிகழ்த்திக் காட்டியதெல்லாம் ஆயுதமேந்தாத - இரத்தம் சிந்தாத புரட்சிகள்!

    இந்நிகழ்வின்போது, பெரியாரின் சிந்தனைகள் - போராட்டங்களை உலகம் முழுதும் கொண்டுசெல்லும் வகையில், வரலாற்றாய்வாளர் மற்றும் முனைவர் தொகுத்துள்ள The Cambridge Companion To Periyar நூலையும்;

    பெரியார் தொடங்கிய சமூக இயக்கத்தில் இருந்து வெகுசன மக்கள் இயக்கமாகக் கிளைத்த தி.மு.கழகம் ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாட்டின் போக்கையே மாற்றியமைத்த புரட்சி வரலாற்றை, இளம் ஆய்வாளரான முனைவர் அவர்கள் ஆய்வுநடையில் வெளிப்படுத்தியுள்ள The Dravidian Pathway நூலையும் வெளியிட்டேன்.

    ஒரு சீர்திருத்தவாதி, தான் பரப்புரை செய்த கருத்துகள் எல்லாம் அரசாணைகளாக மாறிச் செயல்வடிவம் பெறுவதைக் கண்ட பெருமை தந்தை பெரியாருக்கே உரியது. அவற்றைச் செயல்படுத்திய பெருமை பேரறிஞர் அண்ணாவுக்கும்-முத்தமிழறிஞர் கலைஞருக்கும்- நமது திராவிட மாடல் அரசுக்கும் உரியது.

    உறுதியோடு சொல்கிறேன், என்றென்றும் பெரியார்-ன் வழியில், நமது திராவிட மாடல் அரசு தொடரும்! சாதிக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
    • பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

    இந்தியாவில் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் வாங்கியுள்ளார்.

    மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறை அமைச்சரான இவர், இன்று மும்பையில் உள்ள டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை அவர் வாங்கினார்.

    இந்த கார் ரூ. 75 லட்சம் மதிப்புடையது. பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கியதில் மகிழ்ச்சி என்றும், பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

    இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை டெலிவரி செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 350 முதல் 500 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×