என் மலர்
ஆசிரியர் தேர்வு
- முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
- அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டு ராகவா லாரன்ஸ் அவரது உதவி செய்யும் குணத்திற்காக அறியப்படுகிறார்.
இந்நிலையில் சென்னையில் ரெயில்களில் இனிப்பு விற்கும் முதிய தம்பதி குறித்து அறிந்து அவர்களுக்கு உதவ ராகவா லாரன்ஸ் முன்வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சென்னையில் 80 வயது முதியவரும் அவர் மனைவியும் இனிப்பு தயாரித்து ரெயில்களில் விற்பனை செய்வதை இணையதளம் மூலம் அறிந்தேன். அவர்களுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுக்க தயாராக இருக்கிறேன்.
முதியவர் காண்பித்திருக்கும் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பற்றி விவரம் தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்" என்று ராகவா லாரன்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
- நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன்.
- ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன்.
சென்னை :
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ஓரணியில் இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடி+ குடும்பத்தினரும் சேர்ந்து, 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!' என உறுதி ஏற்கிறோம்!
* நான், தமிழ்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
* நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
* நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
* நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
* நான், 'பெண்கள்- விவசாயிகள் - மீனவர்கள்- நெசவாளர்கள்- தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
- சார்லி கிர்க் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.
- உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது. இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்லி கிர்க்கை சுட்டவரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.
- இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஆட்டநாயகானக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எமிரேட்ஸ் அணி 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4, வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதை குல்தீப் தட்டிச் சென்றுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் கடைசியாக அவர் 2018 -ம் ஆண்டு ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார்.
மேலும் 7 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஆசிய கோப்பை டி20 போட்டியில் இது 2-வது சிறந்த பந்துவீச்சாகும். புவனேஷ்வர் குமார் 2022-ம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாகும்.
- என்னோட குடும்பம் 3 வேளை நிம்மதியா சாப்பிட காரணம் ரசிகர்களாகிய நீங்க மட்டும்தான் காரணம்.
- இப்போது 35 ஆவது படமாக மகுடம் படத்தில் நடித்து வருகிறேன்.
நடிகர் விஷால் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.இதையொட்டி அவர் பலருக்கும் நன்றி தெரிவிக்கும் விதிமாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், திரைத்துறையில் 21 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "என்னோட குடும்பம் 3 வேளை நிம்மதியா சாப்பிட காரணம் ரசிகர்களாகிய நீங்க மட்டும்தான் காரணம். என்னுடைய முதல் படமான செல்லமே 2004 இல் வெளியானது. இப்போது 35 ஆவது படமாக மகுடம் படத்தில் நடித்து வருகிறேன். 21 ஆண்டுகாலம் என்பது என்னுடைய வெற்றி அல்ல, உங்களின் வெற்றி. நீங்கள் என் படத்தை தியேட்டரில் பார்க்க கொடுக்கும் பணத்தை கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய பயன்படுத்துவேன்.
- தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
- அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வசுதைவ குடும்பகம் என்ற கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஸ்ரீ மோகன் பகவத் ஜி தனது முழு வாழ்க்கையையும் சமூக மாற்றத்திற்கும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதற்கும் அர்ப்பணித்துள்ளார்.
அவரது 75வது பிறந்தநாளின் சிறப்பு நிகழ்வில், மோகன் ஜி மற்றும் அவரது ஊக்கமளிக்கும் ஆளுமை குறித்து சில எண்ணங்களை எழுதினார். அன்னை பாரதியின் சேவையில் அவரது நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.
- சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமானது.
- போராட்டத்தின்போது நேபாள சிறைகளில் இருந்து 7,000 கைதிகள் தப்பியோடினர்.
காத்மண்டு:
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 கைதிகள் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். தகவலறிந்து விரைந்த ராணுவம் ஹெலிகாப்டரில் அங்கு சென்று கயிறுகளை வீசியது. கயிறுகளைப் பிடித்துக் கொண்டு அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
- இங்கிலாந்துக்கு எதிராக சுப்மன் கில் 5 டெஸ்ட் போட்டியிலும் டாஸ் தோற்றார்.
- சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா அனைத்து போட்டிகளிலும் டாஸ் தோற்றார்.
இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து டாஸில் தோல்வியடைந்து வந்தது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து 5 முறை டாஸில் தோல்வியடைந்தார்.
ஐசிசி சாம்பியன்ஷிப்பில் ரோகித் சர்மா தொடர்ந்து டாஸ் தோற்று வந்தார். இந்திய அணி கேப்டன்களுக்கும், டாஸ்க்கும் எட்டாம் பொருத்தமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கெதிராக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் டாஸ் வென்றார். இதன்மூலம் இந்திய அணி தொடர்ந்து 15 முறை டாஸ் தோற்று வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் தோற்றது. அதன்பின் தொடர்ந்து தோற்று வந்த நிலையில், தற்போது சூர்யகுமாரே அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
- அதிமுக இரண்டாகவும் இல்லை, மூன்றாகவும் இல்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது.
- அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு.
கோவை மாவட்டம், வால்பாறையில் நடந்த இன்று அதிமுகு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் பிரச்சார பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்," ஐசியுவில் வென்டிலேட்டர் உதவியுடன் நோயாளி சிகிச்சையில் இருப்பது போல், திமுக ஆட்சியில் இருக்கிறது. அதிமுக ஒரே அணியாக இருக்கிறது" என்றார்.
மேலும் பேசிய அவர் கூறியதாவது:-
அதிமுக இரண்டாகவும் இல்லை, மூன்றாகவும் இல்லை, ஒன்றாகத்தான் இருக்கிறது; அதிமுகவின் ஒற்றுமையை 2026 சட்டமன்ற தேர்தலில் நிரூபிப்போம்.
அதிமுக கூட்டணி மக்களை நம்பி இருக்கிறது; யார் ஆள வேண்டுமென மக்களே முடிவு செய்கிறார்கள்.
தொண்டர்களின் செல்வாக்கு திமுகவில் குறைந்துவிட்டதால், ஒவ்வொரு வீடாக சென்று கெஞ்சி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வரும் அவல நிலை திமுகுவுக்குத்தான் இருக்கிறது. அதனால், திமுகதான் ஐசியுவில் இருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு கூட்டணி வேறு.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரி இல்லாத வர்த்தக ஒப்பந்த முன்மொழிவு குறித்து ஆலோசனை.
- இந்தியா- இத்தாலி மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்கள்.
இந்திய பிரதமர் மோடி இன்று மாலை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை டொலிபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையில் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முன்மொழியப்பட்டது தொடர்பாக ஆலோசனை நடத்தியதுடன், இதற்கு ஆதரவு அளித்த மெலோனிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் இந்திய பிரதமர் மோடி.
மேலும், இந்தியா- இத்தாலி மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான எங்கள் கூட்டு உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம். உக்ரைனில் மோதலை முன்னதாகவே முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆர்வத்தைப் பகிர்ந்து கொண்டோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் முன்மொழியப்பட்ட வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) வலுப்படுத்த இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பரிசீலித்து வருகின்றன. இரு தரப்பினரும் இந்த வாரம் டெல்லியில் 13வது சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றனர்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 2022-ல் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வரி இல்லாத வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கின.
ஐரோப்பிய யூனியன் இந்தியாவுக்கு 100 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனாடில் டிரம்ப் கேட்டுக்கொண்ட நிலையில், இந்திய பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார்.
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்த போதிலும், பிரதமர் மோடி அடிபணிய மறுத்துவிட்டார். இதனால் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக உள்ளேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதில், ப்ரோ கோட் திரைப்படத்தை முதலில் தயாரித்துள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர் தொடர்ந்து, ரவி மோகன் இயக்குநர் அவதாரத்தை எடுத்துள்ளார். அவர், இயக்கும் முதல் படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு An Ordinary Man என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படக்குழு வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்தது. இது தொடர்பான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், An Ordinary Man படத்திற்கு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
- இப்படம் அக்டோபர் 1-ந்தேதி வெளியாக உள்ளது.
- நடிகர் பார்த்திபன், அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ந்தேதி வெளியாக உள்ளது.
இதனால் கடந்த சில தினங்களாக 'இட்லி கடை' படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகின. நேற்று 'இட்லி கடை' படத்தில் நடிகர் பார்த்திபன், அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இந்த நிலையில், தனுஷுன் 'இட்லி கடை' படத்தில் பணியாற்றியது குறித்து நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
'Mischievous' பார்த்திபன்
Missssschivous Mr தனுஷிடமிருந்து ஒரு பட்டம்!
குறும்பு அரும்புவதே விரும்பும் போதும், or விரும்பப்படும் போதும்! இன்னமும் நான் ரசிகர்களால் விரும்பப்பட, படாத பாடுபடுகிறேன்.
'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன். Mr தனுஷுடன் பணியாற்றும் முதல் அனுபவம். கிடைத்த மிகக் குறுகிய அவகாசத்தில் முற்றிலும் ரசித்தேன் அவரை ஒரு முழுமையான கலைஞனாக. அது பற்றி 14-ல் நேருக்கு நேர் நேரும்! குழிக்குழியான பாத்திரத்தில் நிரப்பப்படும் மாவே இட்லி. ஆர்.அறிவு என்ற கௌரவப் பாத்திரத்தில் இட்டு நிரப்பப்பட்டிருக்கிறேன் நான். இந்த ஆர் அறிவை ரசிகர்கள் தங்கள் பேரரறிவை கொண்டு கமெண்ட்டில் கொண்டாடுவது மகிழ்ச்சி.
இட்லி கடையின் கதைக்கு இணையாக இங்கிலீஷில் சொல்வதானால்….
It tally with a tale of
'Italy shop' by Danish
இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.






