என் மலர்
ஆசிரியர் தேர்வு
- பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி தலைமையில் தமிழகம் வந்துள்ளது.
- தேஜஸ்வி சூர்யா, கூட்டத்தில் கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டன என தன்னிடம் ஒருவர் கூறியதாக பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த சனிக்கிழமை, கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
இதற்கிடையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க தங்கள் கட்சி எம்.பி.க்கள் குழுவை அமைத்து தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார்.
இந்த குழுவில் பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி ஒருங்கிணைப்பாளராகவும், எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார்(தெலுங்கு தேசம்) ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இந்த குழு கரூரில் ஆய்வு செய்து, பலரிடமும் சம்பவத்தன்று நடந்தது குறித்து கேட்டறிந்து வருகிறது. மேலும் குழு கொடுத்த பேட்டியில் தமிழக அரசை குற்றம்சாட்டியது. குறிப்பாக தேஜஸ்வி சூர்யா, கூட்டத்தில் கைகள் கத்தியால் கிழிக்கப்பட்டன என தன்னிடம் ஒருவர் கூறியதாக பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இந்த குழுவில் இடம்பெற்றுள்ள எம்.பி. அனுராக் தாக்கூர் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தங்கள் குழு சார்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
"இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழுப் பொறுப்பேற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் நிகழ்வுகள் என்னென்ன?
நிகழ்விற்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன?.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இந்த சோக நிகழ்வுக்கு வழிவகுத்த குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு என்ன திட்டமிட்டுள்ளது? உள்ளிட்டவறிற்கான பதில்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 10 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
- பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன.
லடாக்கில் தனி மாநில அந்தஸ்து, 6வது அட்டவணையில் சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலநிலை ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவருக்கு ஆதரவாக தலைநகர் லேவில் கடந்த செப்டம்பர் 24 அன்று முழு அடைப்பு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்ற இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட வாங்சுக் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் இந்த வன்முறையை தூண்டியதாக செப்டம்பர் 26 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு ராஜஸ்தானின் ஜோத்புர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனது கணவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. அங்மோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
தனது கணவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரமாகியும், அவரது உடல்நலம், நிலை மற்றும் அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தனக்கு எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்று அங்கமோ தெரிவித்தார்.
முன்னதாக சோனம் வாங்சுக்கின் விடுதலைக்காக ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உடனடி தலையீட்டை ஆங்மோ கோரினார்.
லே போலீசார் சோனம் வாங்சுக்கின் பாகிஸ்தான் சென்றதை குறிப்பிட்டு, அவருக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியது குறித்து விளக்கம் அளித்த அங்மோ, பிப்ரவரியில், பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையும் டான் மீடியாவும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்தன. அதில் சோனம் பங்கேற்றார். அதில் எந்தத் தவறும் இல்லை, அங்குகூட அவர் மேடையில் பிரதமர் மோடியின் 'மிஷன் லைஃப்' திட்டத்தை பாராட்டினார்" என்று தெரிவித்தார்.
தனது கணவர் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு, உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாக கூறிய ஆங்மோ, "குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தும் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம், ஆனால் சோனமை அவதூறு செய்யவும், ஆறாவது அட்டவணை இயக்கத்தை பலவீனப்படுத்தவும் ஒரு இருட்டடிப்பு வேலை நடக்கிறது என்று தெரிவித்தார்.
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளன. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரூ.10 லட்சத்திற்குள் இந்திய சந்தையில் கிடைக்கக்கூடிய எலெக்ட்ரிக் கார்களை அறிந்து கொள்வோம்.
எம்ஜி கோமெட் EV
நகர்ப்புற பயன்பாட்டிற்காக, இரு கதவுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக ஹேட்ச்பேக் கார் கோமெட் EV. இந்திய சந்தையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.24 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 17.3 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் இந்த கார் அதிகபட்சம் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என எம்ஜி கூறுகிறது.
இந்த காரின் உட்புறம் 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என இரட்டைத்திரை அமைப்பு கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு எளிதாகச் செல்ல முன்பக்க இருக்கைகள் சாய்ந்து நகரும் வசதியைக் கொண்டுள்ளன. நகர்ப்புற பயணிகளுக்கும், பட்ஜெட் விலையில் ஒரு சிறிய காரை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

டாடா டியாகோ EV
டாடா நிறுவனத்தின் நான்கு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்கும். டி.சி. பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே 10 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
டாடா பன்ச் EV
இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டி.இவி (Acti.ev) பிளாட்பார்மில் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி கார் ஆகும். இதன் ஸ்மார்ட் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட் வேரியண்ட்டில் 25 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. இது 315 கிலோமீட்டர்கள் வரை 'ரேஞ்ச்' வழங்கும்.
- 30 நாடுகளில் இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
- ‘காந்தாரா சாப்டர்-1’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' வெளியாகி உள்ளது. 30 நாடுகளில் இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வரும் நாட்களில் 'காந்தாரா சாப்டர்-1' வசூலை வாரிக்குவிக்கும் என்றும் முதல் பாகத்தை விட இப்படம் வசூல் சாதனை படைக்கும் என நம்பப்படுகிறது.
- காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும்.
- 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
புதுடெல்லி:
காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதற்கான சோதனை முயற்சிகளை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று மேற்கொள்கின்றன.
வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 1 மணி நேரத்தில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும். டெபாசிட் செய்த காசோலைகளை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். வங்கிகள் அதை செய்யும் தவறும் பட்சத்தில் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.
1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில் காசோலையை செலுத்தினால் அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் ஆகும். பின்பு அது 3 நாட்களாக குறைந்தது. 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.
தற்போது அது 1 நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் வரவுவைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.
- மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள் என்றார் இ.பி.எஸ்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி தொகுதியில், 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தை முடித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்ததாக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர்-தர்மபுரி பிரதான சாலையில் திரண்டிருந்த ஏராளமான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 53 மாதம் ஆகிவிட்டது. இந்த தொகுதிக்கு ஏதாவது பெரிய திட்டம் கொண்டுவந்தார்களா? சிந்தியுங்கள்.
அ.தி.மு.க. அரசு இருக்கும்போது ஏழை, எளிய மாணவர்கள் படிக்க பொறியியல் கல்லூரி கொண்டுவந்தோம். எல்லோரும் இன்ஜினியராகும் வாய்ப்பு உருவாக்கினோம். பட்டப்படிப்புக்கு கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்தோம். கிராமம் முதல் நகரம் வரை அதிகமாக பட்டப்படிப்பு படிக்கும் சூழலை உருவாக்கினோம்.
கே.பி.அன்பழகன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது அம்மாவிடம் எடுத்துச்சொல்லி 68 கலை அறிவியல் கல்லூரியை 10 ஆண்டுகளில் கொண்டுவந்தோம். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி என அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். மருத்துவக் கல்லூரி இடங்களை 3,445-ல் இருந்து 6 ஆயிரம் பேருக்கு உருவாக்கினோம்.
அதுமட்டுமல்ல, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி உங்கள் மாவட்டத்திலும் ஒரு சட்டக்கல்லூரி கொண்டுவந்தோம், 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019-ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், மாநிலம் மேன்மையடைய கல்வி சிறக்க வேண்டும் என கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினோம். ஒரு அரசு எப்படி செயல்பட்டது என்பதற்கு அ.தி.மு.க. ஆட்சியே உதாரணம்.
தி.மு.க. ஆட்சியில் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தாரா? மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என ஸ்டாலின் பேசுகிறார். நாங்கள் மத்திய அரசை எதிர்பார்க்கவில்லை, அம்மா இருக்கும்போது 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மாநில அரசின் நிதியில் உருவாக்கினார். அப்படியான தில்லு திராணி ஸ்டாலினுக்கு இருக்கிறதா?
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட, அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா முதல்வராக இருந்தபோது தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்து தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கிவருகின்றன.
அம்மா வழியில் வந்த அரசு 2019 ஜனவரியில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன்மூலம் பல தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வந்தது, இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது.
ஸ்டாலினும்தான் முதலீடு ஈர்க்கிறேன் என்று வெளிநாடு போனார். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டு, பத்தரை லட்சம் முதலீடு ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்கள். 77 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார். அப்படி என்றால் 25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லையே? எல்லாம் பொய். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகும் இப்போதும் அதையே செய்கிறார்.
ஜெர்மனிக்கு தொழில் முதலீடு ஈர்க்கப்போகவில்லை, முதலீடு செய்யப்போனதுதான் உண்மை. வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் சொல்கிறார். வெள்ளை அறிக்கை விடவேண்டும் என்று கேட்டேன். வெள்ளை பேப்பரை எடுத்து தொழிற்துறை மந்திரி காட்டுகிறார். ஸ்டாலின் அவர்களே… தொழில்துறை மந்திரியும் சரி, நீங்களும் சரி சட்டமன்றத் தேர்தலில் பூஜ்ஜியம்தான் வாங்கப் போறீங்க. எப்படி வெள்ளை பேப்பரை காட்டுறீங்களோ அதேமாதிரி மக்கள் வெள்ளை பேப்பரில் பூஜ்ஜியம் போட்டுக் கொடுப்பார்கள்.
பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேட்டால், மக்களுக்காக அதை சொல்ல வேண்டியது உங்கள் கடமை. ஆனால் கிண்டலும் கேலியும் செய்து மக்களை அவமானப்படுத்தும் விதமாக, இளைஞர்களை ஏமாற்றும் விதமாக வெறும் வெள்ளைப் பேப்பரை காட்டுகிறீர்கள். இதற்காகவா உங்களை அமைச்சராக்கினார்கள்? இவர்களுக்கு முடிவுகட்டும் தேர்தல் 2026 தேர்தல்.
இப்போது எங்கு பார்த்தாலும் பள்ளி, கல்லூரிக்கு அருகில் கஞ்சா விற்பனை நடக்கிறது. போதைப் பொருளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று நான் சொன்னபோது கேட்காமல், இப்போது பேசுகிறார். மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் சீரழிந்தபிறகு சொல்லி என்ன பயன்?. மக்களுக்காக உழைத்த தலைவர்கள் அ.தி.மு.க. தலைவர்கள். தன்னுடைய வீட்டுக்கு உழைக்கும் தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின்.
அண்மையில் கரூரில் நடந்த சம்பவம் நெஞ்சைப் பதற வைக்கிறது, ஒரு நபர் கமிஷன் போட்டிருப்பதால் ஆழமாகப் போகாமல் மேலோட்டமாகப் பேசுறேன். துணை முதல்வர் வெளிநாடு சுற்றுப்பயணம் போனார். செப்டம்பர் 27 துயர சம்பவத்தில் 41 பேர் இறந்ததாக தகவல் தெரிவித்தனர், உடனே தனி விமானத்தில் திருச்சி வந்தார். அங்கிருந்து நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சுற்றுலா போய்விட்டார்.
என்னங்க அநியாயம் இது? 41 பேர் இறந்துள்ளனர். இப்போது மக்கள் துயரத்தில் பங்கெடுப்பவரே உண்மையான துணை முதல்வர். இப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் இருக்கும். யார் எக்கேடு கெட்டுப்போனால் என்ன என்றுதான் அவர் நினைக்கிறார். உண்மையிலேயே அக்கறை இருந்தால் இங்கிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கொடுக்கும் அளவுக்கு திட்டமிட்டு செயல்பட்டிருந்தால் அழகு. அதெல்லாம் கருணாநிதி குடும்பத்தினருக்கு வராது. மக்களைப் பற்றி கவலைப்படாத கட்சி அரசு என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது.
ஒரு பொதுக்கூட்டம் என்றால் மக்கள் எப்படி வருவார்கள், எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட வேண்டும். முழு கவனம் எடுத்து செயல்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். ஏற்கனவே அவர்கள் 4 கூட்டம் நடத்தினார்கள், அவற்றிலும் பாதுகாப்பில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகிற போது அவர்களைக் காப்பது நம் கடமையாக இருக்க வேண்டும்.
நடுநிலையோடு சொல்கிறேன். அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி, எம்.ஜி.ஆர். வருகிறார் என்றால் ஒருநாள் முன்பே மக்கள் காத்துக் கிடப்பார்கள். அப்படி இருக்கும் காலத்தில்கூட எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை, அம்மா பல கூட்டம் போட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். அப்போதும் எதுவும் நடக்கவில்லை.
53 ஆண்டு காலம் பல மாநாடு, பல கூட்டம், பல ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எந்த சம்பவமும் நடைபெறவில்லை. அ.தி.மு.க. மட்டுமல்ல தி.மு.க. உட்பட எல்லா கட்சிகளுக்கும் முழமையாக பாதுகாப்பு கொடுத்தது அ.தி.மு.க. அரசு. எந்தக் கட்சி கூட்டம் நடத்தினாலும் முழு பாதுகாப்பு கொடுத்ததால் இதுபோல எந்த சம்பவமும் நடக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில், கேட்கப்பட்ட அத்தனை கூட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம், எதையும் நிறுத்தவில்லை. ஏனெனில் எதையும் சந்திக்கும் தெம்பு, திராணி அ.தி.மு.க.வுக்கு இருந்தது. இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இல்லை பொம்மை முதல்வர். தி.மு.க. ஆட்சியில் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுப்பதில்லை, நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி கூட்டம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படியே நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் இந்த அரசு பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறது அதனால் 41 உயிர்களை இழந்திருக்கிறோம்.
நான் ஜூலை 7-ம் தேதி எழுச்சி பயணம் தொடங்கினேன் பாப்பிரெட்டிப்பட்டி 165-வது தொகுதி. நான்கைந்து தொகுதிகளில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தது, மீதி இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்களின் பாதுகாப்பில்தான் நடத்தினோம். இப்போதுதான் காவல்துறை வந்திருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடந்து முடிந்து 41 உயிர்கள் பறிபோன பிறகுதான் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். மக்களை பாதுகாக்க வேண்டியது தான் முதல்வரின் கடமை. அவரிடம் தான் காவல்துறை உள்ளது. தேர்தல் நேரத்தில் கருத்துகளைச் சொல்லி மோதிக்கொள்ளலாம். ஆனால், ஆட்சி அமைந்தபிறகு மக்களை கண்ணை இமை காப்பதுபோல காக்க வேண்டும். அப்படி அ.தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் மாற்றாந்தாய் மக்கள் போல பார்ப்பது சரியல்ல, இனியாவது அரசு உணர்ந்து ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றில்லாமல் நடுநிலையோடு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொருபக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரம் ஏரிகள் உள்ளன், அவற்றில் 6 ஆயிரம் கண்மாய்கள் 1240 கோடி செலவில் தூர் வாரினோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பொதுப்பணித் துறையில் எஞ்சிய 8 ஆயிரம் ஏரிகள் தூர் வாரப்படும். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் கொடுத்தோம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது. புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு அதன்மூலம் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம்.
விவசாய தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம். முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை 1000 ரூபாய் கொடுத்தோம். ஒரே சட்டமன்ற விதி 110ன் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கொடுத்து, 90 சதவீதம் பேருக்குக் கொடுத்தோம்.
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. தி.மு.க. அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டம் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 87 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும்.
ஏழை, விவசாயத் தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும்.
இந்தப் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை ஈச்சம்பாடி அணையில் இருந்து நீரேற்றம் திட்டத்தின் மூலமாக இங்கிருக்கும் 66 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் கேட்டு என்னிடத்தில் கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்தபோது கோரிக்கை வைத்தார். அதை ஏற்று அதை ஆய்வுசெய்வதற்கு 10 லட்சம் ஒதுக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது, மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
நாட்டில் பணம், நகை திருடுவார்கள். ஆனால், தி.மு.க. ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட கேவலமான நிலை கிடையாது. தி.மு.க. எம்.எல்.ஏ மருத்துவமனையில் வறுமையில் வாடும் ஏழைகளை தேடிப்பிடித்து அவர்களுடைய கிட்னியை முறைகேடாக எடுத்து பல லட்சத்துக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. அரசாங்கமே குழு அமைத்து ஆய்வு செய்து உண்மை என்பதை கண்டறிந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அனுமதியை மட்டும் ரத்துசெய்தனர். இதில், யாரையும் கைது செய்யவில்லை.
கொடுமையிலும் கொடுமை வறுமை. அந்த வறுமையைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா? நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு ஆசை காட்டி கிட்னிக்குப் பதிலாக கல்லீரல் எடுத்துவிட்டனர். இப்படிப்பட்ட கொடுமையான அரசு தி.மு.க. அரசு. நான் அடிக்கடி சொல்வது போல் பொம்மை முதல்வர் நாட்டை ஆள்வதால் மக்களுக்குத் துன்பமே கிடைக்கிறது.
இந்த அரசால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது? விலைவாசி உயர்ந்துபோச்சு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தினந்தோறும் கொலை நிலவரம் வருகிறது.
அ.தி.மு.க. உங்களுடைய அரசு. இது விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நானும் விவசாயி. எனக்கு வேறு எந்த தொழிலும் இல்லை, அதனால்தான் தி.மு.க. அரசால் என்மீது எந்த வழக்கும் போட முடியவில்லை. என்னென்னமோ தோண்டிப் பார்த்தார், ஒன்றும் நடக்கவில்லை. விவசாயத்தில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது, மண்ணைத்தான் அள்ளிச்செல்ல முடியும்.
உங்களோடு பேசும் வாய்ப்பை இறைவன் கொடுத்த வரமாகக் கருதுறேன்.
இது மண்வெட்டி பிடித்த கை. சிறு வயதில் இருந்தே என்னுடைய அப்பா விவசாயத்தில் என்னை ஈடுபடுத்தினார். விவசாயம் தெரிந்தால்தான் தொழிலாளிக்கு சொல்லிக்கொடுக்க முடியும். நெற்பயிர் எப்படி நடவேண்டும், மஞ்சள், வாழை தென்னை, பாக்கு எல்லாமே என் தோட்டத்தில் இருக்கிறது. நீங்கள் எல்லாம் தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறீர்கள், அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால் அங்கு சென்று சிகிச்சை எடுக்கலாம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். தி.மு.க. அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். இப்படி ஏதாவது திட்டம் தி.மு.க. கொண்டுவந்திருக்கிறதா?
இந்தத் தொகுதியில் பத்தல் மலைக்கு தார்ச்சாலை, ஆரம்ப சுகாதர நிலையம் அமைத்தோம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டினோம், கால்நடை மருத்துவமனை திறந்தோம். அ.தி.மு.க. ஆட்சியில் கடத்தூர் புதிய ஒன்றியம் அமைத்து புதிய கட்டிடம் கட்டினோம். இவற்றுக்கெல்லாம் தி.மு.க. ஆட்சியில் ரிப்பன் வெட்டி திறந்தனர். வேப்பாடு ஆற்றின் குறுக்கே தடுப்பணை கேட்டுள்ளீர்கள், கட்டிக் கொடுக்கப்படும், இத்தொகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்படும், வட்டாட்சியர் அலுவலகம் பரிசீலிக்கப்படும். 2026 தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இங்கே கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்குப் போகும்போது வாகனத்தில் பத்திரமாகப் போய்ச் சேர வேண்டும். மக்களே, உயிர் முக்கியம். இரவு நேரம் வாகன ஓட்டிகள் பத்திரமாக வீடு போய் சேரவேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பை பை ஸ்டாலின் என தெரிவித்தார்.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ஷோமா அக்தர் 3 விக்கெட்டும், மரூபா அக்தர், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ரூபியா ஹெய்டர் அரை சதம் கடந்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி 31.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
- கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர்.
- பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சென்று சந்தித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.
எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை அக்டோபர் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
- அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது.
- இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
அஜித்குமார் ரேஸிங் அணி ஆசிய லீ மான்ஸ் தொடரில் கலந்து கொள்ளவுள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் அதன் லோகோவை அஜித்குமார் தனது கார் மற்றும் ரேஸிங் உடையில் பொறித்ததுள்ளார்.
முன்னதாக தனது ரேஸ் கார் மற்றும் ரேஸ் உடைகளில் Indian Film Industry என்ற லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.
- இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் 2 டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
நேற்று இரவு லாகார்டியா விமான நிலையத்தில் ஒரு டெல்டா விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், தரையிறங்கிய மற்றொரு டெல்டா விமானமும் அதே பாதையை நெருங்கிக்கொண்டிருந்தது.
இந்த செயல்பாட்டில், இரண்டாவது விமானத்தின் இறக்கை முதல் விமானத்தின் மூக்கில் பலமாக மோதியது. இதில் விமானத்தின் இறக்கை உடைந்து கீழே விழுந்தது.
விமானம் மிக மெதுவாக நகர்ந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் ஒரு விமான பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் திருவிழாவான நேற்று இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்ற பிறகு, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.
நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேக ஆராதனை நடைபெறும். அதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது.
- டிவிஎஸ் XL100 ஹெவி டியூட்டி 16-இன்ச் அலாய் வீல்களுடன் டியூப்லெஸ் டயர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- கிரே, புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் பயன்பாட்டு இரு சக்கர வாகனமான XL100 ஹெவி டியூட்டியின் புதிய டாப்-எண்ட் அலாய் வீல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ரூ. 59,800 (எக்ஸ்-ஷோரூம்) விலையில், இந்த வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய வேரியண்ட் அதன் தோற்றம், பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல புது அம்சங்களைக் கொண்டுவருகிறது. டிவிஎஸ் XL100 ஹெவி டியூட்டி 16-இன்ச் அலாய் வீல்களுடன் டியூப்லெஸ் டயர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய வயர்-ஸ்போக் அமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல், எளிதாக பஞ்சர் பழுதுபார்க்கும் கூடுதல் வசதியையும் வழங்குகிறது.
XL100 ஹெவி டியூட்டி புது வேரியண்டில் LED ஹெட்லைட், டைப்-ஏ யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், என்ஜின் கில் ஸ்விட்ச் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர் ஆகிய வசதிகளும் உள்ளன. இயந்திர ரீதியாக, இது 4bhp மற்றும் 6.5Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 99.7cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒற்றை-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் XL100 ஹெவி டியூட்டி 4 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவையும் 89 கிலோ எடையையும் கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 58 கிலோமீட்டர்கள் ஆகும். இது கிரே, புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் வழங்கப்படுகிறது.






