என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வசந்த உற்சவம் தொடக்கம்
- வசந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
- வசந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவ மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தனர்.
அங்கு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஜோடஉபச்சார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு உற்சவ மண்டபத்தை இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தனர். வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாடேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்