search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வசந்த உற்சவம் தொடக்கம்
    X

    ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

    • வசந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • வசந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உற்சவ மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தனர்.

    அங்கு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஜோடஉபச்சார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு உற்சவ மண்டபத்தை இரவு 8.30 மணிக்கு வந்தடைந்தனர். வசந்த உற்சவ நாட்களில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாடேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×