search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆண்டு பெருவிழாவையொட்டி ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி
    X

    ஆண்டு பெருவிழாவையொட்டி ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி

    • புனித அந்தோணியார் ஆலயத்தில் பெருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினந்தோறும் திருப்பலி, தேர்பவனி நடந்தது.

    மந்தாரக்குப்பம் அருகே ரோமாபுரியில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்தில் 12-ம் ஆண்டு பெருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் திருப்பலி, தேர்பவனி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நெய்வேலி டவுன்ஷிப் புனித பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருட்தந்தைகள் நிர்மல்ராஜ், சைமன் அந்தோணிராஜ், பெரியாக்குறிச்சி லாரன்ஸ், புதுக்கோட்டை ரெஜிஸ், கூனங்குறிச்சி பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் ஆண்டு பெருவிழாவுக்கான கூட்டு திருப்பலி நடந்தது.

    அதைத்தொடர்ந்து இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் நெய்வேலி பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அருட் சகோதரிகள், வேதியர்கள், பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×