என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா தொடங்கியது
- இந்த திருவிழா அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ பெரியாழ்வார் சன்னதியில் பெரியாழ்வார் சுவாதி திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து தினமும் பெரியாழ்வார் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதுடன், வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு பெரியாழ்வார் சன்னதியில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்