search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆண்டாள் கோவிலில் பெரியாழ்வார் உற்சவம்
    X

    ஆண்டாள் கோவிலில் பெரியாழ்வார் உற்சவம்

    • 29-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 3-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஆண்டாள் பிறந்த புண்ணிய பூமி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். ஆழ்வார்கள் மொத்தம் 12 பேர். அதில் விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் மற்றும் ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர்கள். விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரிய ஆழ்வார் பிறந்த நட்சத்திரமான ஆனி சுவாதி உற்சவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து தேங்காய் தொடும் நிகழ்ச்சி, சேனைத்தலைவர் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    வருகிற 29-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் பெரியாழ்வார் வீதி உற்சவம் நடைபெறுகிறது. 3-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந்தேதி செப்பு தேரில் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×