search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி மாத சிறப்புகள்
    X

    மார்கழி மாத சிறப்புகள்

    • பாவை நோன்பின் மூலம் பெண்கள் ஆதிசக்தியை வழிபடும் மாதம் இது.
    • இம்மாதத்தில் முருகப்பெருமானுக்கு உற்சவம் நடத்தப்படுகிறது.

    * இம்மாத திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்நாளில் நடராஜப் பெருமானும், சிவபெருமானும் வணங்கப்படுகிறார்கள்.

    * ரமண மகரிஷி, சாரதாதேவி, பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில்தான் அவதரித்தனர்.

    * பாவை நோன்பின் மூலம் பெண்கள் ஆதிசக்தியை வழிபடும் மாதம் இது.

    * வைணவர்களால் கொண்டாடப்படும் பெரும் விழாக்களில் ஒன்றான 'வைகுண்ட ஏகாதசி' நடைபெறும் மாதம். இந்நாளில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    * 12 ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி தினம் இம்மாதம் தான் வருகிறது.

    * 63 நாயன்மார்களில் சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், வாயில நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குரு பூஜை இம்மாதத்தில் நடைபெறுகிறது.

    * இம்மாதத்தில் முருகப்பெருமானுக்கு உற்சவம் நடத்தப்படுகிறது.

    Next Story
    ×