search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அனுமன் ஜெயந்தி: திருமலை தர்மகிரியில் சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் 5 நாட்கள் நடக்கிறது
    X

    அனுமன் ஜெயந்தி: திருமலை தர்மகிரியில் சுந்தரகாண்ட அகண்ட பாராயணம் 5 நாட்கள் நடக்கிறது

    • தர்மகிரி வளாகத்தில் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலம் வேண்டி ஹோமம் நடத்தப்படும்.
    • இந்த நிகழ்ச்சி சுமார் 16 மணி நேரம் வரை நடக்கிறது.

    திருமலையில் வருகிற 14-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கும் அனுமன் ஜெயந்தி உற்சவத்தின் ஒரு பகுதியாக மே 16-ந்தேதி திருமலையில் உள்ள தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் அகண்ட சம்பூர்ண சுந்தரகாண்ட பாராயணத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்துகிறது.

    இந்த நிகழ்ச்சி அன்று காலை 5.50 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை சுமார் 16 மணி நேரம் வரை நடக்கிறது. ஏறக்குறைய 2 ஆயிரத்து 900 சுலோகங்களை கொண்ட இந்தப் பாராயண யக்ஞம் 67 வேத பண்டிதர்களால் வெவ்வேறு சுழற்சிகளில் இடையூறு இல்லாமல் ஓதப்படும்.

    தர்மகிரி வேத பண்டிதர்கள் மற்றும் மாணவர்கள் தவிர, எஸ்.வி.வேத பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம், எஸ்.வி. உயர் வேத ஆய்வு மையம் மற்றும் பக்தர்களும் பங்கேற்கின்றனர். மேலும் தர்மகிரி வளாகத்தில் ஒட்டுமொத்த மனித குலத்தின் நலம் வேண்டி ஹோமமும் நடத்தப்படும்.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×