என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்12 April 2022 4:34 AM GMT (Updated: 12 April 2022 4:34 AM GMT)
வசந்த நவராத்திரி நிறைவு விழாவையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அம்மன் உருவத்துடன் கூடிய செம்பு டாலர் இலவசமாக வழங்கப்பட்டது.
சேலம் டவுனில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது. தினமும் மாலை 6.30 மணிக்கு சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், பக்தர்களால் அபிராமி அந்தாதி பாராயணமும், வீணை உள்ளிட்ட பக்தி இன்னிசை நிகழ்ச்சியும்நடந்தது.
இந்தநிலையில், வசந்த நவராத்திரி நிறைவு விழா நேற்று நடந்தது. காலையில் சுகவனேசுவரர் சுவாமிக்கு ருத்ரம் பாராயணம், தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடத்தி வில்வார்ச்சனை நடந்தது. கோவிலில் மாலை 5 மணிக்கு கோமாதா பூஜையும், அதன்பிறகு 108 சிவனாடியார்களின் திருக்கைலாய வாத்தியமும் வாசிக்கப்பட்டது. பின்னர் கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி சிவனடியார்கள் வாத்தியங்களை இசைத்தவாறு ஊர்வலமாக வலம் வந்தனர். அப்போது, ஏராளமான குழந்தைகள் சிவன், பார்வதி, விநாயகர், லட்சுமி உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடம் அணிந்து வந்திருந்தனர்.
தொடர்ந்து சுகவனேசுவரர் சுவாமிக்கும், சொர்ணாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் சொர்ணாம்பிகை அம்மன் உருவத்துடன் கூடிய சுமார் 10 ஆயிரம் செம்பு டாலர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில், வசந்த நவராத்திரி நிறைவு விழா நேற்று நடந்தது. காலையில் சுகவனேசுவரர் சுவாமிக்கு ருத்ரம் பாராயணம், தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடத்தி வில்வார்ச்சனை நடந்தது. கோவிலில் மாலை 5 மணிக்கு கோமாதா பூஜையும், அதன்பிறகு 108 சிவனாடியார்களின் திருக்கைலாய வாத்தியமும் வாசிக்கப்பட்டது. பின்னர் கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி சிவனடியார்கள் வாத்தியங்களை இசைத்தவாறு ஊர்வலமாக வலம் வந்தனர். அப்போது, ஏராளமான குழந்தைகள் சிவன், பார்வதி, விநாயகர், லட்சுமி உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடம் அணிந்து வந்திருந்தனர்.
தொடர்ந்து சுகவனேசுவரர் சுவாமிக்கும், சொர்ணாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் சொர்ணாம்பிகை அம்மன் உருவத்துடன் கூடிய சுமார் 10 ஆயிரம் செம்பு டாலர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X