search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பொங்கல் பானையுடன் ஊர்வலம்
    X
    பொங்கல் பானையுடன் ஊர்வலம்

    பாலமேட்டில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா

    பாரம்பரிய வழக்கப்படி மேளதாளங்கள் முழங்க வினோதமாக ஆண்கள் மட்டும் மண் பானையை தலையில் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக பொங்கல் வைக்க சென்றனர்.
    மதுரை மாவட்டம் பாலமேட்டில் வடக்குவாசல், செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர், கோவில்களில் பங்குனி மாத பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி பாரம்பரிய வழக்கப்படி மேளதாளங்கள் முழங்க வினோதமாக ஆண்கள் மட்டும் மண் பானையை தலையில் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக பொங்கல் வைக்க சென்றனர்.

    தொடர்ந்து வாணவேடிக்கையுடன் நகை பெட்டி எடுத்து செல்லப்பட்டது. பின்னர் செல்லாயி அம்மனுக்கு திருகண் திறந்து, அலங்கார அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கோவிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×