search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது
    X
    திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது

    திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது

    குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் 3-வது சிவாலயம் திற்பரப்பு மகாதேவர் கோவில் ஆகும். இங்கு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மதியம் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி மாத்தூர் மடம் சங்கரநாராயணரு கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா வருகிற 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம் போன்றவை நடைபெறும். 9 -ம் நாள் விழாவில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 8-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.
    Next Story
    ×