search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.
    X
    கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.

    பரமத்திவேலூர் பகுதியில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு

    பரமத்திவேலூர் பகுதிகளில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

     அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறுதிருவேலீஸ்வரர் கோவில், பாண்டமங்கலம் பழைய காசி விஸ்வநாதர் ஆலயம், பிலிக்கல்பாளையம் அருகே கரூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 
    Next Story
    ×