search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை
    X
    நாகராஜா கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை

    நாகராஜா கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை

    சஷ்டி விரதம் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் நடந்தது.
    முருக கடவுளின் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்த விழாவில் முருகன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி சஷ்டி விரதம் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சன்னதியில் நடந்தது.

    கந்தசஷ்டி விழாவின் 2-வது நாளான நேற்று பாலமுருகன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழாவின் 6-வது நாளான வருகிற 9-ந் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    Next Story
    ×