search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகம்
    X
    கும்பாபிஷேகம்

    மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம்

    மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் விமான கோபுர கலசம் மற்றும் விநாயகப் பெருமானுக்கு தனசேகர் குருக்கள் தலைமையில் கண்ணன் குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
    மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் தெருவில் மேதர் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டதால் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், திரவிய ஹோமமும், 9 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து தீர்த்த கலசங்கள் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது.

    பின்னர் விமான கோபுர கலசம் மற்றும் விநாயகப் பெருமானுக்கு தனசேகர் குருக்கள் தலைமையில் கண்ணன் குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×