search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வசந்தபுரத்தில்கரி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்
    X
    வசந்தபுரத்தில்கரி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்

    வசந்தபுரத்தில்கரி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம்

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    கந்தம்பாளையம் அருகே வசந்தபுரத்தில் கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காவிரியில் இருந்து புனித தீர்த்தம் எடுத்துவரப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு, சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து சாமியை வழிபட்டனர். மேலும் பல்வேறு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் வசந்தபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திருமணமாகாத பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண்களுக்கு தாலிக்கயிறு, குங்குமம் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×