search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வராகி அம்மன்
    X
    வராகி அம்மன்

    பஞ்சமி தினத்தையொட்டி பிளாஞ்சேரி வராகி அம்மனுக்கு மகாபிஷேகம்

    பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகாபிஷேகம் நடைபெற்றது.
    கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனிக்கோவில் கொண்டு வராகி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்தநிலையில் நேற்று பஞ்சமி தினத்தையொட்டி வராகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் மகாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் நாகராஜ குருக்கள், கோவில் அர்ச்சகர்கள் கண்ணன், ராஜேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×