search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் 501 மாவிளக்கு வழிபாடு
    X
    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் 501 மாவிளக்கு வழிபாடு

    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் 501 மாவிளக்கு வழிபாடு

    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் வருடாந்திர கொடை விழாவில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட 501 மா விளக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா கடந்த மாதம் 27-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தினமும் வில்லிசை, நண்பகல் மற்றும் நடுஇரவு நேரங்களில் சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி பவனி வருதல், பக்தர்கள் நேமிசங்கள் படைத்தல், திருவிளக்கு பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், மஞ்சள்பெட்டி பவனி போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.

    3-ம் நாள் இரவு 11 மணி அளவில், மழை வேண்டி கோவில் கொடை விழாவில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட 501 மா விளக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேளதாளங்களுடன் புறப்பட்ட மா விளக்கு ஊர்வலம் அனைத்து தெருக்களிலும் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. கோவிலில் மழைக்காக பாடல்கள் பாடி, மந்திரங்கள் ஓதி, ஆண்கள் கும்மியடித்து வழிபாடு செய்தனர். நேற்று காலையில் கொடை விழா நிறைவு பூஜை நடந்தது.
    Next Story
    ×