search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடை விழா"

    • சித்திரை பொங்கல் வழிபாடு இன்று தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது.
    • பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    நாகர்கோவில்:

    அருமனை அருகே உள்ள ஒற்றயால்விளை மாத்தூர்கோணம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா மற்றும் சித்திரை பொங்கல் வழிபாடு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது.

    விழாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு உஷபூஜை, காலை 7 மணிக்கு தேவி பாராயணம், 10.30 மணிக்கு களபாபிஷேகம், 11 மணிக்கு சமய சொற்பொழிவு, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு லட்சதீபம், இரவு 7.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், 8.30 மணிக்கு சிற்றுண்டி ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் நிர்மால்யம், உஷபூஜை, தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சிகளாக நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு சுமங்கலி பூஜை, 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளின் பண்பாட்டு போட்டிகள், மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 15-ந் தேதி மாலை 4 மணிக்கு பூநீர் கும்ப பவனி, இரவு 2.30 மணிக்கு குருதி பூஜை ஆகியவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 8 மணிக்கு துலாபாரம், 8.30 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு சித்திரை பொங்கல் வழிபாடு, 10.30 மணிக்கு வலியபடுக்கை, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் போன்றவை நடக்கிறது. பிரதிஷ்டை தினவிழா அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

    • ஜவான் அய்யப்பன் தொடங்கி வைத்தார்
    • பா.ஜ.க. உறுப்பினர் அமர்நாத், கோவில் நிர்வாகி ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சொத்தவிளை சிவசுடலைமாட சுவாமி கோவிலில் வருடாந்திர கொடை விழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஜவான் அய்யப்பன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் சுடலைமணி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணை தலைவர் ராஜன், பா.ஜ.க. உறுப்பினர் அமர்நாத், கோவில் நிர்வாகி ஜெயராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும் நடைபெற உள்ளது.
    • கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்ப வாரிசுதாரர்கள் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    சூரங்குடி அருகே உள்ள வத்தக்காவிளை இசக்கியம்மன் கோவில் கொடை விழா நாளை (27-ந்தேதி) தொடங்கி 29-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி நாளை மாலை 5 மணிக்கு பக்தி காணமும், 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

    நாளை மறுநாள் (28-ந்தேதி) காலை 5 மணிக்கு பக்தி காணமும், 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு இசக்கியம்மன் கதை வில்லிசையும், பகல் 1 மணிக்கு இசக்கியம்மனுக்கு அலங்கார தீபாராதனையும், 1.30 மணிக்கு அன்ன தானமும், மாலை 4 மணிக்கு பக்தி காணமும், மாலை 5 மணிக்கு நையாண்டி மேள மும், 6 மணிக்கு காலசுவாமி கதை வில்லிசையும், இரவு 7 மணிக்கு கால சுவாமிக்கு தீபாராதனையும், 8 மணிக்கு நையாண்டி மேளமும், 9 மணிக்கு வில்லிசையும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும், நடைபெற உள்ளது.

    விழாவின் 3-ம் நாளான 29-ந்தேதி காலை 6 மணிக்கு சுடலை மாடசுவாமி கதை வில்லிசையும், 7 மணிக்கு சுடலைமாட சுவாமிக்கு தீபாராதனையும் நடைபெற உள்ளது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்ப வாரிசுதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு ஊட்டுபடைத்தல் நடைபெற்றது.
    • இன்று பொங்கல் வழிபாடு, திருஷ்டி பூஜை நடக்கிறது.

    முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் இருந்து ஆலமூடு அம்மன் ஜோதி புறப்பட்டு ஆலங்கோட்டை வந்தது. அங்கு சிவசுடலைமாடசாமி கோவிலில் அன்னதானம் நடந்தது. பின்னர் பல ஊர்கள் வழியாக ஊர்வலமாக சென்று ஆலமூடு அம்மன் கோவிலை வந்தடைந்தது.

    விழாவில் நேற்று முன்தினம் மாலையில் அம்மன் சிங்க வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.

    விழாவில் நேற்று காலையில் ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று அருகே உள்ள குட்டிகுளத்து இசக்கியம்மன் கோவில் பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். பக்தர்கள் சேவா சங்க தலைவர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.

    இதில் நிர்வாகிகள் மகாலிங்கம், சதீஷ், ராஜேந்திரன், ரவிச்சந்திரன், அருணா ஸ்டாலின், ராஜேஷ், அருள்ராஜ், மாரியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் பக்தர்கள் பூங்கரகம், முளைப்பாரி, பால்குடங்கள் சுமந்தும், சில பக்தர்கள் அலகு குத்தியும் வந்தனர்.

    ஊர்வலம் வடக்கூர், சந்திப்பு, எம்.ஜி.ஆர் நகர், மருத்துவர் நகர், மூவேந்தர் நகர் வழியாக ஆலமுடு அம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை, அக்னிசட்டி எடுத்தல், அம்மன் தேரில் பவனி வருதல் நடந்தது.

    இரவு பூப்படைப்பும், தொடர்ந்து பூக்குழி பூஜையும் நடைபெற்றது. இதில் காசி ஆத்ம சைதன்னியா பீடம் குருமகாசன்னிதானம் ஜெகத்குரு கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் 41 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் திரளானோர் கலந்துகொண்டனர். அதிகாலையில் அம்மனுக்கு ஊட்டுபடைத்தல் நடைபெற்றது.

    விழாவில் இன்று (புதன்கிழமை) பொங்கல் வழிபாடு, மஞ்சள் நீராடுதல், அன்னதானம் மற்றும் திருஷ்டி பூஜை ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் இ. அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • 1-ந்தேதி இரவு 12 மணிக்கு சாம கொடை விழா நடக்கிறது.
    • 2-ந்தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    கோவை சங்கனூர்-நல்லம்பாளையம் ரோட்டில் ஞானமூர்த்தீஸ் வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 20-ம் ஆண்டு கொடை விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முகூர்த்தகால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் பக்தர்கள் சூழ முகூர்த்த கால் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு 501 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பட்டி மன்றம் நடக்கிறது. 31-ந் தேதி இரவு வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் அம்மனுக்கு குடியழைப்பு பூஜை மற்றும் மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, மதிய கொடை விழா மற்றும் அம்மன் திருவீதி உலா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் அழைப்பு நடக்கும். அன்று இரவு 12 மணிக்கு சாம கொடை விழா மற்றும் வான வேடிக்கை நடக்கிறது. 2-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    • 1-ந்தேதி கும்பம் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது.
    • 2-ந்தேதி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது.

    தமிழகத்தில் தசரா திருவிழாவில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொடை விழா வரும் வருகிற 31-ந் தேதி இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து 10 மணிக்கு வில்லிசை நடக்கிறது.

    ஆகஸ்டு 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி, 8.30 மணி, மாலை 5 மணி, இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.15 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணி, இரவு 7 மணிக்கு அன்னதானம், இரவு 8 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, இரவு 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் நடக்கிறது.

    2-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், 10 மணிக்கு சிற்றுண்டி அன்னதானம், 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.30 மணிக்கு வில்லிசை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கிறது.

    ஏற்பாடுகளை தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர், கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 28-ந்தேதி இரவு 12 மணிக்கு நள்ளிரவு பூஜை நடைபெறும்.
    • 29-ந்தேதி முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.

    கழுகுமலை மருத்துவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன், சப்பாணி மாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து விநாயகர், சப்பாணி மாடசாமி, கருப்பசாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு கோவில் வளாகத்தில் கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறும். வருகிற 27-ந் தேதி மாலை 6 மணியளவில் பெண்கள் பங்கேற்கும் 501 திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    28-ந்தேதி மதியம் 12 மணியளவில் உச்சிகால பூஜையும், இரவு 12 மணிக்கு நள்ளிரவு பூஜையும் நடைபெறும். 29-ந்தேதி காலை 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது

    • 25-ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடக்கிறது.
    • 26-ந்தேதி உற்சவமூர்த்திகளுக்கு நீராட்டு நடக்கிறது.

    முப்பந்தல் அருகே ஆலமூடு அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூக்குழி கொடைவிழா ஒவ்வொறு வருடமும் ஆடி மாதம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பூக்குழி கொடைவிழா வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் 23-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை தொடர்ந்து அகண்ட நாம ஜெபம், 8 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு சீர்வரிசைகள் செய்துவிட்டு, அம்மன்ஜோதி அலங்கரிக்கபட்ட ரதத்தில் கிருஷ்ணம்மாள் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, இரவு 10 மணியளவில் ஆலமூடு கோவில் வந்தடைதல். மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு அம்மன் ஜோதிக்கு சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடக்கிறது.

    விழாவில் 24-ந் தேதி காலை 8 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 4 மணிக்கு அம்மன் சிங்கவாகனத்தில் பவனி வருதல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

    25-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று அருகே உள்ள குட்டிகுளத்து இசக்கியம்மன் கோவில்-பிள்ளையார் கோவிலில் இருந்து பூங்கரகம், அபிஷேக குடங்கள், முளைபாத்தி, வேல் குத்து, பறவை காவடி, சூரிய காவடியுடன் பக்தர்கள் பஜனை மற்றும் மேளதாளங்களுடன் ஆலமூடு அம்மன் கோவில் வருதல். ஊர்வலத்தை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைக்கிறார்.

    காலை 8 மணிக்கு அம்மன் சன்னதியில் 108 கலசங்களுடன் கலச பூஜை, 11 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து அன்னதானம், 12.30 மணிக்கு சாமிகள் பாயாச குளியல், மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 4 மணிக்கு அக்னிசட்டி எடுத்தல், 5 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், இரவு 7 மணிக்கு பூக்குழி பூஜையும், அக்னி வளர்த்தலும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, பூப்படைப்பு, 1 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அதிகாலை 3 மணிக்கு ஊட்டு படைத்தல் நடக்கிறது.

    26-ந் தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடு, பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு நீராட்டு, மதியம் 2.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு திருஷ்டி பூஜை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் இ.அருணாசலம் தலைமையில் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர், மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • அம்மன் விசேஷ அலங்காரத்துடன் காட்சி அளித்தார்.
    • ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஒன்றாகும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய் அன்று கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடைவிழாவுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. விழாவை முன்னிட்டு 2 நாட்களுக்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து குவிந்துள்ளனர். அவர்கள் கோவில் வளாகத்தில் ஓலையால் செய்யப்பட்ட குடிலில் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் கொடைவிழாவை முன்னிட்டு அம்மன் விசேஷ அலங்காரத்துடன் காட்சி அளித்தார். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பகல் ஒரு மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் சாற்றி வழிபட்டனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பட்டிமன்றம், மாலை் 6 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், மரத்திலான கை, கால்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து சிறப்பு வாணவேடிக்கை நடந்தது.

    கோவிலில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தேங்காய், பழம் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    நள்ளிரவில் நாராயணர், பாமா ருக்மணியுடன் குரங்கணி வீதிகளில் உலா வரும் காட்சி நடைபெற்றது. கோவை வாழ் குரங்கணி இளைஞர்கள், நண்பர்கள் பத்தாவது ஆண்டாக அன்னதானம் வழங்கினர்.

    • இன்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
    • ஜூலை 7-ந்தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.

    கழுகுமலை பாண்டி முனீஸ்வரர், சந்தனமாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த ஜூன்.23-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. 26-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேக, ஆராதனை நடந்தது. 28-ந்தேதி பாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 29-ந்தேதி இரவு 7 மணியளவில் ஆதிபராசக்தி கும்மி பாடல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை 9 மணிக்கு திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். தொடர்ந்து 12 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு அக்னி சட்டி எடுத்து ஊர் விளையாடல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடந்தது. இன்று(சனிக்கிழமை) காலை 9 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் பாட்டு கச்சேரி நடக்கிறது. வரும் ஜூலை 7-ந்தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.

    • சுவாமி, அம்மனுக்கு தீப ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஜூலை 11-ந்தேதி கோவில் கொடைவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

    விநாயகர் நாராயணர் மற்றும் பரிவார மூர்த்திகள் பெரியசாமி அம்மன் ஆகியோர் புஷ்ப அலங்காரத்துடன் காட்சியளித்தனர். சுவாமி, அம்மனுக்கு தீப ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பின்னர் முப்பிடாதி அம்மன் சன்னதி முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காலுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவை சாற்றப்பட்டு புஷ்ப அலங்காரத்துடன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கால் நாட்டப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னைவாழ் நாடார் சங்கத்தினர், கோவை வாழ் நாடார் சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர் விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டார்.

    • பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
    • மாடசாமிக்கு தீபாராதனை நடைபெறுகிறது

    சோட்டப்பணிக்கன் தேரிவிளை சிவசுடலைமாடசாமி கோவில் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு கடல் பதம் கொண்டு வருதல் நிகழ்ச்சி, 8 மணிக்கு நையாண்டி மேளம்,

    9 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை, பகல் 12 மணிக்கு நாராயணசாமிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, பிற்பகல் 2 மணிக்கு சிவ சுடலைமாடசாமி, பிரம்மசக்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    நள்ளிரவு 12 மணிக்கு சிவ சுடலைமாடசாமிக்கு மலர் அலங்காரத்துடன் தீபாராதனையும், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மாசான சாமிக்கு தீபாராதனையும், 4 மணிக்கு களுக்கார மாடசாமிக்கு தீபாராதனையும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×