என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் இன்று இரவு திருவிளக்கு பூஜை பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் இன்று இரவு திருவிளக்கு பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2022/11/07/1788042-5paramankurichi.jpg)
பரமன்குறிச்சி வட்டன்விளை கோவில் விழாவில் சாமி மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பரமன்குறிச்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவில் இன்று இரவு திருவிளக்கு பூஜை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.
- செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை நடைபெற்றது.
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி ஊராட்சி வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் ஐப்பசி வருடாந்திர பெருங்கொடை விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை நடந்தது.
தொடர்ந்து யாக சாலை பூஜையில் இருந்து புனித நீர் எடுத்து கோவில் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. செல்வ விநாயகர், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆலங்கார பூஜை, வருஷாபிஷேகம் நடைபெற்றது.
பகல் 11 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், அலங்கார பூஜையும், பிற்பகல் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெற்றது.
இன்று இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, உச்சினிமாகாளி அம்மன் சிங்க வாகனத்தில் பவனி, நாளை (செவ்வாய் கிழமை) காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், இரவு 8 மணிக்கு சுமங்கலி பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார பூஜை, சந்தனமாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி நடக்கிறது.
9-ந் தேதி (புதன்கிழமை) பகல் 12 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு 7 மணிக்கு கரகாட்டம், 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் பூஞ் சப்பரத்தில் பவனி, 10-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)