search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கோடீஸ்வரர் கோவில்
    X
    திருக்கோடீஸ்வரர் கோவில்

    திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் சாமி தரிசனம்

    தஞ்சை திருக்கோடீஸ்வரர் கோவிலில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    தஞ்சை மாவட்டம் திருக்கோடிக்காவல் கிராமத்தில் திருக்கோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி திரிபுரசுந்தரி அம்மனுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×