search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    ஆரணியில் பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத பிறப்பு விழா

    கொரோனா தொற்று பரவலால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆரணி சார்ப்பனார்பேட்டை வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கொரோனா தொற்று பரவலால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அனுமதியின்றி அனைத்து சிறப்பு பூஜைகளும் ஏகாந்தமாக நடத்தப்பட்டது. பட்டாச்சாரியார்கள் மட்டுமே பூஜையில் பங்கேற்றனர்.

    அதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலுமங்கை சமேத சீனிவாசப்பெருமாள் கோவிலிலும், கோதண்டராமர் கோவிலிலும் சிறப்புப்பூஜைகள் நடந்தது.
    Next Story
    ×