search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாலாந்தரவை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
    X
    வாலாந்தரவை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

    வாலாந்தரவை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

    வாலாந்தரவை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. இதில் மக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிக மக்கள் வசிக்கக்கூடிய வாலாந்தரவை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.

    கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்குவதற்காக மழை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதில் வாலாந்தரவை மக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவில் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×