search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேந்தமங்கலம் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை
    X
    சேந்தமங்கலம் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

    சேந்தமங்கலம் பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை

    சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    சேந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் சேந்தமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் அவர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு திருவிழா நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டும் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பெண்கள் பால் குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மேலும் அங்கு மூடப்பட்டிருந்த தீக்குண்டத்தில் மலர்களை தூவி வழிபட்டனர். பின்னர் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    Next Story
    ×