search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    வல்லன்குமாரன் விளைபெருமாள்சாமி கோவிலில் திருவோண திருவிழா

    நாகர்கோவில் அருகே வல்லன்குமாரன்விளை பெருமாள்சாமி கோவிலில் திருவோண திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே வல்லன்குமாரன்விளை பெருமாள்சாமி கோவிலில் திருவோண திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

    விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், பிரசாதம் வழங்குதல், காலை 8 மணி முதல் 10 மணி வரை பஜனை, 10 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பஜனை, இரவு 8.30 மணிக்கு நையாண்டி மேளம், இரவு 9 மணி முதல் 12 மணி வரை வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    நாளை(சனிக்கிழமை) காலை 6 மணி முதல் 8 மணி வரை பத்தி கானம், 8 மணி முதல் 9 மணி வரை நையாண்டி மேளம், பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×