search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் அம்பாள்
    X
    சிறப்பு அலங்காரத்தில் அம்பாள்

    லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் நிறைவு விழா

    லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த ஆடிப்பூரம் திருவிழாவின் நிறைவு விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கடந்த 10 நாட்களாக ஆடிப்பூரம் திருவிழா கொரோனா நோய் தொற்று காரணமாக கோவில் வளாகத்திலேயே கோவில் பணியாளர்கள், குருக்களை கொண்டு விழா நடத்தப்பட்டு வந்தது.

    இதில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் 10-ம் நாளான நேற்று ஆடிப்பூரம் திருவிழா நிறைவு விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் தவஜஅவரோஹனம், கொடி இறக்குதல், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் திருக்கோவில் பிரகாரம் வலம் வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×