search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா
    X
    நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா

    நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா

    நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரம் கழித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு வெள்ளைபட்டு சாற்றி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.
    நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் திருவிழா நடைபெறவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் கிளி வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பிரகார உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரம் கழித்தல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக காலையில் ஆடிப்பூர அம்மனுக்கு வெள்ளைபட்டு சாற்றி பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

    இதை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லாததால், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
    Next Story
    ×