search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில்.
    X
    திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில்.

    திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு முதல் ஜீப் இயக்க அனுமதி

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற திருமலை நம்பி கோவில் உள்ளது.
    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற திருமலை நம்பி கோவில் உள்ளது. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வாரம் முதல் இந்த கோவில் திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே நம்பி கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்த ஜீப்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. கோவில் திறக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து ஜீப்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று அவற்றின் உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இன்று (சனிக்கிழமை) முதல் நம்பி கோவிலுக்கு கட்டுப்பாடுகளுடன் ஜீப்களை இயக்க வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். திருக்குறுங்குடியில் இருந்து நம்பி கோவிலுக்கு 30-க்கும் மேற்பட்ட ஜீப்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×