என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆனி மாத அமாவாசையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்10 July 2021 3:45 AM GMT (Updated: 10 July 2021 3:45 AM GMT)
பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி உற்சவரான பெருந்தேவி சமேத வரதராஜபெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சரநாராயணபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவமூர்த்தியான சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலிலும் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது உற்சவரான பெருந்தேவி சமேத வரதராஜபெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் நெல்லிக்குப்பம் ருக்மணி, சத்யபாமா சமேத வேணு கோபால சுவாமி கோவிலில் நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் வேணுகோபாலசுவாமி வெண்ணைத்தாழி கண்ணன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலிலும் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது உற்சவரான பெருந்தேவி சமேத வரதராஜபெருமாள் கண்ணாடி அறையில் எழுந்தருளி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் நெல்லிக்குப்பம் ருக்மணி, சத்யபாமா சமேத வேணு கோபால சுவாமி கோவிலில் நடந்த அமாவாசை சிறப்பு பூஜையில் வேணுகோபாலசுவாமி வெண்ணைத்தாழி கண்ணன் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X