என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் திருவிழா: தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
Byமாலை மலர்9 April 2021 8:38 AM GMT (Updated: 9 April 2021 8:38 AM GMT)
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கொடி பட்டத்தை அம்மன் பெற்று கொண்டு சிம்ம வாகனத்தில் கோவிலுக்கு எழுந்தருளினார். அதன்பின்னர் நள்ளிரவில் கொடியேற்றம் நடந்தது.
இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிம்ம வாகனம், காமதேனு வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி திருவீதி உலா வந்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தீச்சட்டி, சக்தி கரகம், பால்குட ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீச்சட்டி, பால்குடம் எடுத்துக்கொண்டு தெப்பக்குளத்தை சுற்றி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். 21 அக்னி சட்டியையும் எடுத்து கொண்டு பக்தர்கள் வந்தது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த நிகழ்ச்சியை காண தெப்பக்குளத்தை சுற்றி ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
வருகிற 14-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிம்ம வாகனம், காமதேனு வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என தினமும் மாலையில் பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி திருவீதி உலா வந்தார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தீச்சட்டி, சக்தி கரகம், பால்குட ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீச்சட்டி, பால்குடம் எடுத்துக்கொண்டு தெப்பக்குளத்தை சுற்றி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். 21 அக்னி சட்டியையும் எடுத்து கொண்டு பக்தர்கள் வந்தது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த நிகழ்ச்சியை காண தெப்பக்குளத்தை சுற்றி ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
வருகிற 14-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X