search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை மேலவீதியில் நேற்று இரவு பச்ைசக்காளி-பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    தஞ்சை மேலவீதியில் நேற்று இரவு பச்ைசக்காளி-பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    தஞ்சையில் பச்சைக்காளி- பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி

    தஞ்சையில் பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.
    தஞ்சையில் நடைபெறும் கோவில் விழாக்களுள் பச்சைக்காளி, பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சியும் ஒன்று. தஞ்சை பள்ளியக்ரகாரம் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள கோடியம்மன்கோவில் பச்சைக்காளி-பவளக்காளி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதையொட்டி தஞ்சை மேலவீதி சங்கரநாராயணர் கோவிலில் இருந்து பச்சைக்காளியும், மேலவீதி கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்து பவளக்காளியும் புறப்பட்டு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கியது. இதையடுத்து நேற்று இரவு பச்சைக்காளி, பவளக்காளிக்கு மேலவீதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதையடுத்து இருவரும் பக்தர்களுக்கு அருள்பலித்தனர். ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு உறவாடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று (வியாழக்கிழமை) பச்சைக்காளி-பவளக்காளிக்கு தஞ்சை தெற்குவீதி, கீழவாசல், கரந்தை பகுதிகளில் பூஜைகள் முடிந்து பின்னர் மேலவீதியில் விடையாற்றி பூஜை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை காளியாட்ட உற்சவ கமிட்டியினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×