என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாலமேடு பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா
Byமாலை மலர்30 March 2021 6:56 AM GMT (Updated: 30 March 2021 6:56 AM GMT)
பாலமேடு பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் அக்னிசட்டி, கரும்பு தொட்டில் எடுத்து சிறப்பு பூஜை செய்தனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின் முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் பங்குனி மாதபொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழா கடந்த 21-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 22-ந்் தேதி முதல் 27-ந்் தேதி வரை அம்மனுக்கு மேளதாளம் முழங்க முளைப்பாரி தண்ணீர் செம்பு ஊர்வலம் வந்து திண்ணையில் வைத்து கும்மியடித்து அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், மலர் அலங்காரம், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் பொங்கல் வைத்து வழிபாடும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அம்மனுக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், கரகம், மாவிளக்கு, குழந்தை வரம் பெற்றவர்கள், கரும்பு தொட்டிலுடன் வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கொடிமரம் இறக்கி முளைப்பாரி தண்ணீரில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், மலர் அலங்காரம், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் பொங்கல் வைத்து வழிபாடும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அம்மனுக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், கரகம், மாவிளக்கு, குழந்தை வரம் பெற்றவர்கள், கரும்பு தொட்டிலுடன் வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கொடிமரம் இறக்கி முளைப்பாரி தண்ணீரில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X