என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்புவனம் கோவில் திருவிழா: பக்தர்கள் முககவசம் அணிந்து வர அறிவுரை
Byமாலை மலர்24 March 2021 6:43 AM GMT (Updated: 24 March 2021 6:43 AM GMT)
திருப்புவனம் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம் வசூலிக்கப்படும் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ந்தேதி திருக்கல்யாணமும், மறுநாள் (27-ந்தேதி) தேரோட்டமும் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் கொரோனா பரவலை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சேதுராமு தலைமையில் கோவிலில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, கோவில் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அவசியம் முக கவசம் அணிந்து வரவேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிக்காக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதிகளை மீறினால் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி மூலமாக அபராதம் வசூலிக்கப்படும் எனவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதால் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அவசியம் முக கவசம் அணிந்து வரவேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கோவில் மற்றும் சுற்றுப்புற வளாகத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பேணிக்காக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விதிகளை மீறினால் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி மூலமாக அபராதம் வசூலிக்கப்படும் எனவும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுந்தரராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X