search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X
    தஞ்சை மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு

    தஞ்சை மூலை அனுமனுக்கு 1008 எலுமிச்சை பழ மாலை சாற்றப்பட்டது

    தஞ்சை மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 1008 எலுமிச்சை பழ மாலை சாற்றப்பட்டது.
    தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. இந்த கோவில் சனி தோஷம் போக்கும் கோவில் ஆகும். மூலை அனுமார் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். தொடர்ந்து 18 அமாவாசை அன்று மூலை அனுமாரை வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் மூலை அனுமாருக்கு தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும்சிறப்பு திருமஞ்சனம் தீபாராதனை நடைபெற்றது.

    மாலை துன்பங்களை போக்கும் துளசி அலங்காரம் சேவை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.6.30 மணிக்கு அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து மூலை அனுமாருக்கு1,008 எலுமிச்சை பழங்கள் மாலை சாற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மாசி அமாவாசை அன்று மூலை அனுமாரை கும்ப ராசிக்காரர்கள் வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது ஆகும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜாபான்லே மற்றும் உதவி ஆணையர் கிருஷ்ணன் மற்றும் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் மேற்பார்வையாளர் ரெங்கராஜன், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×