என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிலிக்கல்பாளையம் அருகே மந்தமாரியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்4 Feb 2021 8:11 AM GMT (Updated: 4 Feb 2021 8:11 AM GMT)
கபிலர்மலை ஒன்றியம் பிலிக்கல்பாளையம் அருகே சாமிநாதபுரத்தில் உள்ள மந்தமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.
கபிலர்மலை ஒன்றியம் பிலிக்கல்பாளையம் அருகே சாமிநாதபுரத்தில் உள்ள மந்தமாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் மந்தமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கடந்த 30 மற்றும் 31-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. கடந்த திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை கோவில் வளாகத்தில் மாவிளக்கு பூஜையும், இரவு வாணவேடிக்கையும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டுதலும், மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மந்தமாரியம்மன் கோயில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கடந்த 30 மற்றும் 31-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. கடந்த திங்கட்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை கோவில் வளாகத்தில் மாவிளக்கு பூஜையும், இரவு வாணவேடிக்கையும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டுதலும், மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மந்தமாரியம்மன் கோயில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X