
உலக நன்மைக்காக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவு, வெள்ளி சப்பரத்தில் மின்னொளி அலங்காரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தை சுற்றி வலம் வந்தனர். திருமேனி கணேசபட்டர் பூஜைகள் செய்தார். காளியம்மன் கோவில், சித்தி விநாயகர் கோவில் உள்பட வழிநெடுக அபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
சிவ பக்தர்கள் பக்தி இசை நடத்தினர். பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், செயல் அலுவலர் இளஞ்செழியன், ஆலய பணியாளர் முத்துவேல், விழாக்குழு மற்றும் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.