search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா
    X
    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா

    சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவிலின் முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வழிபட்டனர்.
    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தீமிதி திருவிழாவையொட்டி கடந்த 15-ந் தேதியன்று கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா காட்சியும் நடைபெற்றது. நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடங்களை சுமந்து வந்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    பின்னர் கோவிலின் முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×