என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராட அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை
Byமாலை மலர்21 Dec 2020 6:52 AM GMT (Updated: 21 Dec 2020 6:52 AM GMT)
நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராட அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
108 வைணவ தலங்களில் ஒன்றான தென் திருப்பதி என போற்றி அழைக்கப்படுவது மதுரை அருகே உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலின் அழகர்மலை உச்சியில் பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது.
கொரோனா தொற்று காரணமாகவும், அரசு தடை உத்தரவு உள்ளதாலும் கடந்த 8 மாதங்களுக்கு மேல் இங்கு புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அரசு பல தளர்வுகளை அறிவித்தது.
இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அழகர்கோவில், சோலைமலை முருகன், பதினெட்டாம் படிகருப்பணசுவாமி, மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் ஆகிய கோவில்களில் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குற்றாலத்தில் அருவியில் நீராடுவதற்கும், திருச்செந்தூர், ராமேசுவரம், கடல்களில் நீராடுவதற்கு அரசு வழிகாட்டுதல்படி அனுமதிக்கப்பட்டது.
ஆனால் நூபுர கங்கையில் மட்டும் தீர்த்தமாட இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை. அரசும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைவில் புனித நீராட அனுமதிக்க வேண்டும் என்று பத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாகவும், அரசு தடை உத்தரவு உள்ளதாலும் கடந்த 8 மாதங்களுக்கு மேல் இங்கு புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அரசு பல தளர்வுகளை அறிவித்தது.
இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அழகர்கோவில், சோலைமலை முருகன், பதினெட்டாம் படிகருப்பணசுவாமி, மலை உச்சியில் உள்ள ராக்காயி அம்மன் ஆகிய கோவில்களில் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குற்றாலத்தில் அருவியில் நீராடுவதற்கும், திருச்செந்தூர், ராமேசுவரம், கடல்களில் நீராடுவதற்கு அரசு வழிகாட்டுதல்படி அனுமதிக்கப்பட்டது.
ஆனால் நூபுர கங்கையில் மட்டும் தீர்த்தமாட இன்னும் அரசு அனுமதி அளிக்கவில்லை. அரசும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் விரைவில் புனித நீராட அனுமதிக்க வேண்டும் என்று பத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X