search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை
    X
    பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை

    பரமத்திவேலூர் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை

    பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சஷ்டியையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சஷ்டியையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதன்படி பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், கபிலர்மலை பாலசுப்ரமணிய சாமி, பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், பொத்தனூர் பச்சைமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்பிரமணியர், பாலப்பட்டி கதிர்காமத்து கதிர்மலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பிராந்தகத்தில் எழுந்தருளியுள்ள 34 அடி உயரம் கொண்ட ஆறுமுகர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×